என் உள்ளம்
Thursday, May 21, 2026
உன் குழலலைகளில்
Monday, May 18, 2026
உனை என்றுமே அறிவேன் - அமி சீனி கோ சீனி தொமாரே
உனை என்றுமே அறிவேன்
தமிழாக்கம்: அடியேன்.
உனை என்றுமே அறிவேன் நானே,
அன்பேயென் அயற்பெண்ணே
பல கடல்கள் கடந்து வாழும்
அன்பேயென் அயற்பெண்ணே
உனை என்றுமே அறிவேன் நானே,
அன்பேயென் அயற்பெண்ணே
பல கடல்கள் கடந்து வாழும்அன்பேயென் அயற்பெண்ணேஉனை என்றுமே அறிவேன் நானே,அன்பேயென் அயற்பெண்ணே
கண்டேன்,
கார்காலக் காலையில் உனைக் கண்டேன்,
இளவேனில் இரவினில் உனைக் கண்டேன்,
கண்டேனே... எந்தன் உள்ளின் உள்ளேயே,
அன்பேயென் அயற்பெண்ணே
நான் வானத்தை கேட்கலானேன்காதேங்கும் கேட்பது உந்தன் பாட்டேஉந்தன் உயிராய் இருகக்கும் நான் தானேஅயற்பெண்ணே..
ஞாலத்தை சுற்றிய பின்னே,
நானும் வந்ததிப் புதிய நாடே
இப்போ புதிதாய் நிற்பதுன் வாசல்
அன்பேயென் அயற்பெண்ணே
உனை என்றுமே அறிவேன் நானே,
அன்பேயென் அயற்பெண்ணே
பல கடல்கள் கடந்து வாழும்
அன்பேயென் அயற்பெண்ணே
உனை என்றுமே அறிவேன் நானே,
அன்பேயென் அயற்பெண்ணே
உளமே துள்ளிடாதே! - தெலுங்குப் பாடல்!
உளமே! துள்ளிடாதே!
பல மொழிப் பாடல்களையும் சுவைத்து மகிழும் நான், இன்னும் தெலுங்குத் திரைப்படப் பாடல்களை அவ்வளவாகக் கேட்டதில்லை. அண்மையில் இயூட்டியூபில் துழாவிக்கொண்டிருந்தபோது எனக்குப் பரிந்துரைக்கப்பட்ட பாடல் "மனசா துள்ளி படகே". தனக்கு பிடித்திருக்கும் ஆணைவிட, தான் எல்லா வகையிலும் குறைந்தவள் என எண்ணிச் களித்துக்கொள்ளும் ஒரு பேதைப் பெண், ஆற்றாமையில் பாடுவதாக அமைக்கப்பட்டு, "சிறீவாரிக்கி பிரேமாலேகா" என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல்.
ஓரிரு முறை இப்பாடலை கேட்டபின், இது எனது உளங்கவர்ந்த பாடல்களில் ஒன்றாகிவிட்டது. பசுபலேதி இரமேசு எனும் இசையமைப்பாளரின் மிக அருமையாக மெட்டமைத்திருக்கிறார். நான்கூட முதலில் இது நம் இளையராசாவோ என நினைக்குமளவுக்கு தரமான இசை. சானகியின் குரலும் பூர்ணிமாவின் நடிப்பும் பாடலுக்கு உரஞ்சேர்கின்றன.
கவிஞர் வெட்டூரி சுந்தரராமமூராத்தியின் வரிகளானவை, அப்பெண்ணின் ஏக்கத்தை கச்சிதமாகப் படம்பிடித்துக்காட்டுகிறது. பாடலின் உணர்வையும் பொருளையும் சந்தத்தையும் சிதைக்காது, இந்த வரிகளை எனக்கு இருக்கும் அடிப்படை மொழியறிவினால், தமிழாக்கம் செய்துள்ளேன். குற்றங்கள் இருப்பின் பொறுத்தருளவும்.
மிகையாய் அவா கொளாதே.
அவனுக்கு உன்பால் விருப்பமோ இலையோ?
அந்த நல்லவேளை வருமோ வராதோ?
பொறுமை கொள்ளேன் உளமே! இன்றே லிழிவே!.
உளமே! துள்ளிடாதே.
மிகையாய் அவா கொளாதே.
அவனுன்னை மிகவாக விரும்பிட,
அழகேது முன்னிடம் உளதோ?அவனுந்தன் நிலை எண்ணி மலைத்திட,
செல்வமேனும் செழிப்பாய் உளதோ?படிப்பு பதவி எதுண்டோ உனக்கு?பகட்டோ வடிவோ எதுமிலை உனக்கு.உனதெல்லைமீ றாதே உளமே.
உளமே! துள்ளிடாதே.
மிகையாய் அவா கொளாதே.
அவனுக்கு உன்பால் விருப்பமோ இலையோ?
அந்த நல்லவேளை வருமோ வராதோ?
பொறுமை கொள்ளேன் உளமே! இன்றே லிழிவே!.
என்நெஞ்சே! காதலை பெற்றிட,
என்னென்ன நோன்புகள் நோற்றாய்?கடவுள்கள் காதலர்கருளிடும்,
அரிதான பேறெதும் பெற்றாய்!?உள்ளமே நீகேள், அவன்மிக்க எழிலன்,அவனே உனக்கு இணையாவா னென்ற,கனா வேண்டாமே பேதை உளமே!
உளமே! துள்ளிடாதே.
மிகையாய் அவா கொளாதே.
அவனுக்கு உன்பால் விருப்பமோ இலையோ?
அந்த நல்லவேளை வருமோ வராதோ?
பொறுமை கொள்ளேன் உளமே! இன்றே லிழிவே!.
உளமே! துள்ளிடாதே.
மிகையாய் அவா கொளாதே.
Saturday, September 13, 2025
தொண்ணூற்றொன்பது வகையான மலர்கள்
குறிஞ்சிப்பாட்டில் தலைவியும் தோழியரும் குவித்து வளையாடியதாக கபிலர் குறிப்பிடும் தொண்ணூற்றொன்பது வகையான மலர்களும்
குறிஞ்சிப்பாட்டு 61 - 96
-
Angiosperms
- Mangoliids⇨Mangoliales⇨Mangoliaceae
- சண்பகம் - Mangolia Champaka
- Mangoliids⇨Mangoliales⇨Mangoliaceae
-
Nymphaeales⇨Nymphaeaceaea
- ஆம்பல், அல்லி - Nymphaea pubescens
- குவளை, வெள்ளையல்லி - Nymphaea odorata
- மணிக்குலை, கருங்குவளை - Nymphaea rubra
- நெய்தல், வெள்ளாம்பல் - Nymphaea nouchali
-
Monocots
-
Dioscoreales⇨Dioscoreaceae
- வள்ளி - Dioscorea pentaphylla
-
Asparagales⇨Hypoxidaceae
- நிலப்பனை, குறத்திநிலப்பனை - Curculigo orchioides
-
Alismatales⇨Aponogetonaceae
- கொட்டி - Aponogeton natans
-
Commelinids
-
Areclaes⇨Arecaceae
- பாளை, தென்னை - Cocos nucifera
- வஞ்சி, பிரம்பு, சோத்துப்பிரம்பு, அரினி - Calamus rotang
-
Zingiberales⇨Musaceae
- வாழை - Musa acuminata
-
Poales
-
Poaceae
- உந்தூழ், பெருமூங்கில் - Dendrocalamus giganteus [OR] Bambusa bambos
- வேரல், சிறுமூங்கில் - Dendrocalamus strictus [OR] Arundinaria weightiana
-
Cyperaceae
- எருவை, கோரை - Cyperus rotundus
-
-
-
Lilales⇨Colchicaceae
- காந்தள், செங்காந்தள், தோன்றி - Gloriosa superba
- கோடல் வெண்காந்தள் - Gloriosa modesta
-
Pandanales⇨Pandanaceae
- கைதை - Pandanus odorifer
- தாழை - Pandanus fascicularis
-
-
Eudicots
-
Proteales⇨Nelumbonaceae
- தாமரை, முளரி - Nelumbo nucifera
-
Santalales⇨Santalaceae
- ஆரம், சந்தனம் - Santalum album
-
Caryophyllales
-
Amaranthaceae
- குரீஇப்பூளை, பூளை, சிறுபூளை, சிறுபீளை, பூளாப்பூ, பொங்கப்பூ, கண்பூளை, கண்பீளை, சிறுகண்பீளை, காட்டுக்களைப்பூடு, தேங்காய்ப்பூ, பீளைசாறி, கற்பேதி, பாசாணபேதி - Ouret lanata
-
Plumbaginaceae
- செங்கொடுவேரி, செங்கொடிவேலி - Plumbago indica
- வேரி - Plumbagi rosa
-
-
Superasterids⇨Asterids
-
Solanales⇨Convolvulaceae
- மணிச்சிகை - Ipomaea sepiaria
- அடும்பு - Ipomaea pes-caprae
- பகன்றை-2, கிலுகிலுப்பை-2 - Operculuma turpenthun
- +கூதாளம், கூதளம், கூதாளி, கூதளி, வெண்கூதாளம், தாளி, வெண்டாளி, செங்கூதாளம், தாளிக்கொடி, தாளக்கொடி, வெண்டாளி - Ipomoea sepiaria
-
Asterales⇨Asteraceae
- கண்ணி, மருக்கொழுந்து - Artamisia absinthium
- கரந்தை - Sphaeranthus indicus
- +கரிசலாங்கண்ணி, வெண்கரிசலை, கையாந்தகரை - Eclipta prostrata
-
Ericales
-
Lecythidaceae
- மராஅம், மரவம், கடம்பு, செங்கடம்பு, அடம்பு, அடப்பு - Barringtonia acutangula
-
Primulaceae
- அனிச்சம் - Anagal arvensis
-
Saporaceae
- பாலை, உலக்கைப்பாலை, காணுப்பாலை - Manilkara hexandra
- வகுளம், மகிழம், இலஞ்சி, மகிழ் - Mimusops elengi
-
-
Lamiids
-
Gentianales
-
Apocynaceae
- புழகு, எருக்கு, நீல எருக்கு, வெள்ளெருக்கு - Calirtopis gigantea
- குடசம், குடசப்பாலை மலைமுல்லை - Holarrhena pubescens [OR] வெட்பாலை - Wrightia tinctoria [OR] பூவரசு?? - Malvales⇨Malvaceae⇨Thespesia populbea???
- நந்தி, நந்தியாவட்டை, நந்தியார்வட்டை - Tabernaemontana divaricata|coronaria
-
Rubiaceae
- குரவம், குரவகம், குரா, மலைவசம்பு - Tarenna gaertn
- வெட்சி, இட்டிலிப்பூ, தெட்சி, செச்சை, குல்லை, சேதாரம், செங்கொடுவேரி - Ixora saurei/coccinea/malabarica/lawsonii/johnsonii
- பிடவம், பிடவு - Randia malabarica
- தணக்கம், நுணா, நுணவு, நுணவம், மஞசணத்தி, மஞ்சள்நாறி, மஞ்சள்வண்ணா, மஞ்சலாட்டி - Morinda coreia
-
-
Lamialis
-
Bignoniaceae
- பாதிரி - Stereospermum chelonoides
-
Acanthaceae
- குறிஞ்சி, நீலக்குறிஞ்சி - Strobilanthes kunthiana
- சுள்ளி, செம்முள்ளி, கருங்காலி, கருத்தாலி, தும்பி, ஆச்சா, மரா, சாலம் - Barleria prionitis
-
Lamiaceae
- குளவி-1 - Pogostemon cablin
- சிந்து, சிந்துவரம், நொச்சி - Vitex negundo
- தும்பை, முடிதும்பை - Leucas aspera
- துழாஅய், துழாய், திருத்துழாய், கருந்துளசி - Ocimum tenuiflirum|sanctum
- வடவனம், செந்துளசி, திருநீற்றுப்பச்சை, நத்தைச்சூரி, நத்தைச்சுண்டி, குழிமீட்டான், தாருணி, கடுகம், தொலியாகரம்பை - Ocimum basilicum
-
Oroxyleae
- குளவி-2 - Millingtonia hortensis
-
Oleaceae
- கொகுடி - Jasminum pubescens|multiflorum
- செம்மல், சாதிமல்லி - Jasminum grandiflorum
- நள்ளிருணாறி, இருள்நாறி, இருள்வாசி, இருவாச்சி, அடுக்குமல்லி - Jasminum sambac
- தளவம், சாமந்தி, செம்முல்லை - Jasminum polyanthum/elongatum
- பித்திகம், காட்டுமல்லிகை - Jasminum augustifolium
- முல்லை, நித்தியமல்லி - Jasminum auriculatum
- மௌவல், மரமல்லி, பன்னீப்பூ - Jasminum officinale
- சேடல், பவழமல்லி, பவளமல்லி, பாரிசாதம் - Nyctanthes arbortristis
-
-
-
-
Superrosids
-
Rosids
-
Cucurbitalis⇨Cucurbitaceae
- பீரம், பீர்க்கு - Luffa aegyptiaca/acutangula
-
Sapindales⇨Anacardiaceae
- புளிமா - Spondias pinnata
- மா, தேமா - Mangifera indica
-
Calastrales⇨Celastraceae
- வானி, ஏர்க்குளி - Euonymus divhotomys
-
Brassicales
-
Capparaceae
- மாவிலங்கம், கூவிரம், மாவிலங்கு, மாவிலங்கம், குமரகம் - Crateva religiosa
-
Salvadoraceae
- பாங்கர், உகாய் - Salvadora persica
-
-
Sapindales
-
Sapindaceae
- +கொற்றான், உழிஞை, முடக்கொத்தான், எரிக்கொடி - Cardiospermum halicacabum
-
Meliaceae
- +வேமாபு - Azadirachta indica
-
Rutaceae
- குருந்தம், குருந்து, காட்டுகொளேஞ்சி, காட்டெலுமிச்சை, காட்டுநாரங்கம் - Atalantia monophylla
- கூவிளம், வில்வம்(சங்) - Aegle marmelo
- நரந்தம் - Citrus aurantium
- நறவம், இலவங்கம்(சங்), கிராம்பு(போர்த்து) - Luvunga scandens
-
-
Rosales
-
Rhamnaceae
- சூரல், சூரை, சூரையிலந்தை, சூரைமுள் - Ziziphus oenopolia
-
Moraceae
- குருகிலை, குருகு - Ficus virens
- +பலா - Artocarpus hetrophyllys
-
-
Malvids
-
Myrtales
-
Melastomataceae
- காயா, காயாம், பூவை, குயம்பு, காசா, அஞ்சனி, பூங்காலி - Memecylon umbrllatum/ed
-
Lythraceae
- குரலி, கருந்தாமக்கொடி - Trapa natans/bicornis/rossica
-
Combretaceae
- எறுழம், எறுழ் - Getonia floribunda
- மருதம், மருது, கருமருது, வெண்மருது, நீர்மருது, குலமருது - Terminalia elliptica/arjuna
-
-
Malvales
-
Thymelaeaceae
- காழ்வை, அகில் - Aquilaria malaccensis
-
Bixaceae
- கோங்கம், கோங்கிலவு - Cochlospermum religiosum
-
Dipterocarpaceae
- பயினி, பின்னியாக்கம் - Vateria indica
-
Malvaceae
- இலவம், இலவு - Bombax ceiba [OR] Ceiba pentandra??
- பாரம், பருத்தி - Gossypium herbaceum
-
-
-
-
-
Fabids
-
Malpighiales
-
Malpighiaceae
- குருக்கத்தி - Hiptage benghalensis|madabolta
-
Calophyllaceae
- புன்னாகம் - Caliphyllum polyanthum/elatum
- புன்னை - Caliphyllum inoplyllum
- நாகப்பூ - Mesua ferrea
- வழை, சுரப்புன்னை - Mammea suriga [OR] Ochrocarpos longifolius
-
Ochnaceae
- செருந்து, செருந்தி, சிலந்தி - Ochna squarrosa
-
Clusiaceae
- பசும்பிடி, பச்சிலை - Garcinia xanthochymus
-
Euphorbiaceae
- காஞ்சி, ஆத்தரசு, ஆற்றுப்பூவரசு - Mallotus nudiflorus
- தில்லை - Excoecaria agallocha
-
-
Fabales
-
Fabaceae
- பிண்டி, அசோகம், அசோகு, ஆயில் - Saraca asoca/indica
-
Bauhinia
- ஆர், ஆத்தி - Bauhinia racemosa/tomentosa
-
Caesalpinioideae
- ஞாழல்-1, பொன்னாவரசு-1, புலிநகக்கொன்றை-1 - Caesalpinia cucullata
- ஞாழல்-2, பொன்னாவரசு-2, புலிநகக்கொன்றை-2 - Senna sophera
- வாரம், ஆவாரை, ஆவிரை, ஆவாரம், துவகை, மேகாரி - Senna auriculata
- கொன்றை, சரக்கொன்றை, கொன்னை, அசராதி, கவுதி, கவுசி - Cassia fistula
- திலகம், மஞ்சாடி, ஆனைக் குன்றிமணி, பெருங்குன்றி, குண்டுமணி - Adananthera pavonina
- மாரோடம், செங்கருங்காலி - Senegalia catechu
- போங்கம், புங்கை, புங்கு, புன்கு, பூந்தி, கிரஞ்சம் - Adananthera pavonina
- வாகை - Albizia lebbeck
-
Faboideae
- வேங்கை, போங்கம் - Pertocarpus marsupium
- அதிரல், புனலி - Derris scandens
- அவரை - Lablab purpureus
- கருவிளை, கருவிளம், நீலச்சங்கு, காக்கணம், காக்கட்டான் - Clitoria ternatia typica
- செருவிளை, வெண்சங்கு, வெள்ளைக்காக்கம், கரிசண்ணி - Clitoria ternatia albiflira
- ஈங்கை - Acacia ceasia
- பகன்றை-1, கிலுகிலுப்பை-1 - Pongamia pinnata
- பலாசம், பலாசு, புரசு, பொரசு, புரசை - Butea monosperma|frondosa
- குறுநறுங்கண்ணி, குன்று, குன்றி, குன்றிமணி - Abrus precatorius
- +முருக்கு, முள்முருக்கு, முள்முருங்கை, கல்லியாண முருங்கை, கிஞ்சுகை, கவிர், புழகு, மலையெருக்கு - Erythrina veriegata
-
-
-
Wednesday, May 29, 2024
கல்வியின் தரம்
கல்வியின் தரம்
Friday, March 1, 2024
பாலு
பாலு
அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்படியான வரிகள் மிக மெல்லிதாக ஒலித்துக்கொண்டிருந்தது.. இப்படிப்பட்ட பாடல் வரியை முதன்முதாய்க் கேட்கிறேன்.. ஏதோ புதுப்பாடல் என எண்ணிக்கொண்டிருக்கும்போதே "ஒற்றைமுறைக் கடவெண்?" என்றார் ஓட்டுனர். திறனியை துழாவி 6790 என்று "காற்பதனி எனக்குத் தேவையில்லை. உங்களுக்கு வேண்டாமென்றால் அணைத்துவிடுங்கள்" என்று நான் கூறுவதற்குள்..
என்ற வரிகளும் தெளிவ்க மிக மெல்லியதாகக் கேட்டது.. என் உள்ளம், 'யாரிந்த கவிஞர்? இவ்வளவு கொசாசைத்தமிழில் பாடலை எழுதியுள்ளார். அந்த வரிகளை செந்தமிழிலேயே அழகாக எழுதியிருக்கலாமே..' என்றெல்லாம் அசைபோடத்தொடங்கியிருந்தது. வண்டி அசோக்நகர் வளைவில் சல்லெனத் திரும்பியதில் அந்நினைவுகளிலிருந்து மீண்டும் இயல்நினைவுக்கு வந்தேன்..
ஆமாம், பாடுவது யார்? அப்படியே பாலு போலவே பாடுகிறாரே. யாராக அருக்கும்? ஆ, அவரது மகன் சரண். அருமையாகப் பாடுகிறாரே.. ஓட்டுனரிடம் "ஒலியளவை சற்று கூட்டிடுங்கள்" என்றேன்..
ச்ச.. அப்படியே அப்பாவின் குரலிலேயே இம்மியளவும் பிசகாமல் பாடியுள்ளாரே.. அருமை, அவரின் திறமையில் நல்ல முன்னேற்றம். முன்னொரு முறை ஒரு நேர்காணலில் தனது மகனைப்பற்றி பாலு கூறிடும்போது, "அவர் இன்னும் நிறைய பயிற்சிபெறவேண்டும். பாடும்போது அவருக்கு கவனகுறைவு இருக்கிறது. சிலநேரம் அதிரவலை பிறழலும் ஏற்பட்டுவிடுகிறது.. இன்னும் இன்னும் கவனம் தேவை...". ஆமாம், அதை நானும் சில மேடைநிகழ்ச்சிகளிலும் கவனித்திருக்கிறேன். அப்போது இப்பாடலை...
இது நம்ம பாலுவே தான்.. பாலுவே தான்.. பாலுவே தான்.. அனைவரையும் ஏங்கவைத்துவிட்டு இப்படிச் செத்துப்போயிட்டியேடா.. பெருந்தொற்றில் எவன் வேணுன்னாலும் செத்துப்போயிருக்கட்டும், ஆனா நீ...
வண்டி வீட்டருகே வந்திருந்தது. பணத்தை கொடுத்துவிட்டு வீட்டைநோக்கி நடக்கலானேன். என் கண்ணில் மீண்டும் ஈரம். மெதுவாய் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு கைகளால் கண்களைத் துடைத்துக்கொண்டே நடந்தேன்..
Monday, December 25, 2023
ஐந்தாம் தமிழ்
ஐந்தாம் தமிழ்
உன் குழலலைகளில்
உன் குழலலைகளில் உந்தன் கன்னக்குழி பார்த்ததும் உள் வயிற்றினில் பனி பெய்யும் இரவே உயிரே உன் சிரிப்பினில் உதிரமே நெஞ்சில் உறைகின்ற போலே கரு...
-
அன்புத் தமிழர்களே!! நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது!! நீங்கள் இடும் கருத்துகளை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துகளில் மட்டுமே ...
-
குறிஞ்சிப்பாட்டில் தலைவியும் தோழியரும் குவித்து வளையாடியதாக கபிலர் குறிப்பிடும் தொண்ணூற்றொன்பது வகையான மலர்களும் இதழ் ஒண் செங்...
-
ஸ,ஷ,ஜ,ஹ,ஶ,க்ஷ,ஶ்ரீ ஆகிய வடவொலிதரும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தலாமா? எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப. சார்ந்து வர...

