Thursday, November 5, 2020

மொழிசார் அரசியலும் உண்மையும் உரிமையும் அறிவோம்

மொழிசார் அரசியலும் உண்மையும் உரிமையும் அறிவோம்

எந்த நாட்டின் அடிப்படை உரிமைகளிலும் 'மொழிநிகர்மை உரிமை' என்பதானது இடம்பெற்றிருக்கவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்பு ஆகும்.  ஆனால், இந்திய அரசமைப்புச்சட்டத்தில் "இந்தியனின் அடிப்படை உரிமைகள்" எனும் முதன்மையான பகுதியின் கீழ்,
     ௧} சமயம்
     ௨} இனம்
     ௩} சாதி
     ௪} பால்
     ௫} தலைமுறை
     ௬} பிறந்த இடம்
     ௭} வாழுமிடம்,

ஆகிய ஏழு கூறுகளின் அடிப்படையில், நாட்டு மக்களுக்கு இடையேயான "நிகர்மை உரிமை" என்பதானது கீழ்க்காணும் தலையாய சட்டப்பிரிவுகளால்  வரையறுக்கப்படுகின்றன:-
௧}  "சட்டத்தின் நிகர்மைப்பார்வை" எனும் 14ம் சட்டப்பிரிவு 
௨} "வேற்றுமைகளை தடைசெய்தல்" எனும் 15ம் சட்டப்பிரிவு 
௩} "(பொது பணிகளில்) நிகர்மையான வாய்ப்பு" எனும் 16ம் சட்டப்பிரிவும் 

மேலே கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை நிகர்மைக் கூறுகளின் உரிமை பட்டியலில் "மொழி"யானது ஒரு உரிமையாகச் சேர்க்கப்படாததை கவனியுங்கள்.  இதன் வாயிலாக மொழி நிகர்மை அல்லது மொழி உரிமையைப் பொருத்தவரையில், நம் நாட்டின் அரசமைப்புச்சட்டமானது,  அடிப்படையில் "வழு" கொண்டதாகவே காணப்படுகிறது.  இப்படிப்பட்ட ஒரு "அடிப்படை உரிமை" விளக்கம் தான் ஒரு இந்திய குடிமக்கள் யார் யார் என்பதையும் அவர்களுக்கான உரிமைகள் என்னென்ன என்பதையும் விளக்குகிறது.   

காட்டாக:  ஒருவரோ ஒரு அரசோ, உங்களை மொழிரீதியாக பாரபட்சமாக கையாண்டால், உங்களை பாதுகாக்க நம்நாட்டு அரசுச்சட்டத்தில் எந்த அடிப்படை உரிமையும் இல்லை.  கேவலம்!.. 

நம்நாட்டினன் அரசமைப்புச்சட்டத்தின்  அடிமானமே "மொழியுரிமையில்" ஆட்டத்தில் இருக்க, கீழ்காணும் சட்டப்பிரிவுகளைப் பற்றி பேசுவது என்பது வீணிலும் வீண்.  

ஆக, மேற்குறிப்பிட்ட 14, 15, 16, 120, 343-348, 351 ஆகிய அரசமைப்புச் சட்டப்பிரிவுகளானவை, நாடுதழுவிய அளவில் அனைத்துத் துறைகளிலும் சீரான இந்தி மொழிப் பரப்பலையும்  பயன்பாட்டையும் படிப்படியான திணிப்பையும் உறுதி செய்து இந்தி மொழியை சங்கதம் மற்றும் இன்னபிற இந்திய மொழிகளிலிருக்கும் வங்களைப் பயன்படுத்தி வளப்படுத்தி அதனை 'நாட்டுப் பொது (தொடர்பு) மொழி' ஆக்குவதை நோக்கி நகர்த்தும் திட்டத்துக்கு மிகத்தெளிவாக வழிவகுக்கிறது.   இவற்றுள் 14, 15, 16 ஆகிய சட்டப்பிரிவுகளில் "மொழி" என்பது குறிப்பிடப்படாததே, பின்வரும் சட்டப்பிரிவுகளில் உள்ள 'நிகரற்ற மொழிக் கொள்கைக்கு' வழிவகுக்கிறது.  இது இந்தியாவின் பன்மைத்தன்மைக்கு முற்றிலும் எதிரான சட்டங்களாகும்.

தில்லியிலிருந்து நாட்டை ஆளும் எந்தவொரு அரசியல் கட்சியும் இச்சட்டங்களில் மொழிநிகர்மைக்காக மாற்றங்களைச் செய்யும் என எதிர்பார்ப்பது வீண்வேலை.  இரும்புக்கோட்டை கட்டிக்கொண்டு உள்ளிருக்கும் எட்டாக்கனியாகவும் அந்த சட்டப்பிரிவுகள் உள்ளன.  இந்த சட்டப்பிரிவுகளை சிறிதேனும் தொடவேண்டும் என்றாலும் கூட, அதற்கு நாடுதழுவிய அளவிலு ஒரு மிகப்பெரும் புரட்சியே வெடிக்க வேண்டியிருக்கும்.  மிகப்பெரிய அரசியல் அழுத்தம் தேவையிருக்கும்.  இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தும் சேர்ந்து ஒன்றிய அரசோடு ஒத்துழையாமையை மேற்கொள்ளவேண்டும்.   "மொழி நிகர்மை"யைப் பொறுத்தவரையில், நமது அரசமைப்புச்சட்டமானது, மிகமோசமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், 'மொழி நிகர்மை' என்ற ஒன்று இல்லாமல் விடுதலை இந்தியாவில், முழு "நிகர்மை" என்பது, முழுமை பெறவே செய்யாது.  மொத்த 'நிகர்மை"க்கும், "மொழி நிகர்மை"யே தலையாயதாகும். 

ஆதலால், நமக்கான அடிப்படைத் தேவையானது, "நிகர்மை உரிமை" பகுதியில் இருக்கும் பட்டியலில் கட்டாயம் "மொழி"யையும் ஓரு அடிப்படை உரிமையாகச் சேர்த்திடல், என்பதாகவே இருக்கவேண்டும்.  மொழியை இப்பட்டியலில் சேர்த்துவிடாதவண்ணம் அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கிய வரைவுக்குழுவில் இருந்த உறுப்பினர்கள் (அம்பேட்கார் உட்பட), மிகவும் நயவஞ்சகத்தோடே கவனமாக இருந்துள்ளனர்.  அரசமைப்புச்சட்டத்தை வரையறுக்க 1948ம் ஆண்டிலிருந்து 1950ம் ஆண்டு வரை நடந்த கலந்தாய்வுகளில், இந்நியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சென்ற சார்பாளர்களில் ஒருவர்கூட இதற்கு எதிராக குரல் எழுப்பவில்லை, என்பது  வியப்பளிக்கும் ஒன்றாகும்.  மொத்ததில் மிக மோசம்!!

நண்பர்களே, எம்மொழியும் கற்கலாம். அது நம் தனிப்பட்ட உரிமை. ஆனால், இந்தி திணிப்பு என்பது கொடுமை.  இந்தித் திணிப்பால் அழிந்த மொழிகள் ஏராளம்.  மேற்கண்ட அரசமைப்புச் சட்டப்பிரிவுகளால் இந்திய ஒன்றிய அரசானது வளர்த்தெடுத்து ஆதிக்கம் கொண்டு தூக்கிப்பிடிக்கும் இந்தி மொழியானது ஒரு "மொழிகள் கொல்லும் மொழி"யாகவே செயல்படுகிறது. 
பேசிடுவோர் எண்ணிக்கையில் ஆதிக்கம் கொண்டதாகவும், அரசாலும் இராணுவத்தாலும் தூக்கிப்பிடிக்கப்பட்ட மொழிகளானவை, பிறமொழிகள் மாய்ந்து போகும் அளவிற்கு இல்லாமல் செய்து காலத்தால் அதன் வளங்களை தனதாக்கிக்கொள்ளும், என்பதற்கான பல சான்றுகளை வரலாறு நமக்குக் காட்டியுள்ளது.. languages ( killed OR destroyed OR erased ) by hindi' என கூகுளிப்பாருங்கள்.

மொழியளவில் இந்தியும் மற்றமொழிகளைப்பொல் கபடமற்றதே. ஆனால், இந்தியின் பெயரால் செய்யப்படும் அரசியலானது, கபடங்களும் சுழ்ச்சிகளும் ஆதிக்கமும் ஆணவமும் நிறைந்தது.


இந்தி மொழியானது இந்திய நாட்டின் பொதுமொழி (தேசியமொழி) அல்ல - குசராத்து உயர் நீதிமன்றம்.

 

இந்திய நாட்டின் பொதுவான அடையாளங்களில் 'இந்தி' இல்லை.


இத்தி மொழியானது பெருவாரி மக்களின் தாய்மொழியும் அல்ல.


 இந்தி ஒரு அன்னிய மொழி.

இந்தியாவில், விலங்கினங்களிடையே 'நாய்'கள் எண்ணிக்கையில் ஒரளவிற்கு மிகுதியாக இருக்கிறது என வைத்துக்கொண்டதால், 'குரைப்பு' என்ப்து இந்திய விலங்குகளின் நாட்டுப்பொதுவான இணைப்பு மொழியாக அறிவிக்கப்பட்டு, இனி, பூனைகள், கழுதைகள், மான்கள், மாடுகள், யானைகள், மீன்கள், பறவைகள், எலிகள், புலிகள், தால்பின்கள், சிறுத்தைகள், எருமைகள் ஆகிய அனைத்து விலங்குகளும் இனி 'குரைக்க'வும் கற்றுக்கொள்ளவேண்டும்.
இந்த கதை எந்த அளவிற்கு மடத்தனமானதோ, அந்தளவுக்கு மடத்தனமானது தான் பெரும்பான்மைவாதம்.
நம்மைப்போன்ற பன்மைத்தன்மை கொண்ட சமூகத்தில், "பெருவாரி பேசுமொழி" என்ற ஒற்றைத்தகுதியை மட்டும் வைத்து 'நாட்டுப்பொதுவான இணைப்புமொழி' என்பதனைச் செயல்படுத்தினால், பின்விளைவுகள் மோசமானதாக இருக்கும். சான்றுகள்:
௧} [கிழக்கு]பாகிசுத்தான் (வங்காளதேசம்)
௨} இலங்கை (ஈழம்)
௩} கேடலோனியா (சுபெயின்).
"கூகுள் டிரான்சிலேட்" போன்ற குறுஞ்செயலிகள், நேரடிக் குரல் மொழிபெயர்ப்புகளை இப்போதே திறம்படச் செய்கிறது. முயன்று பாருங்கள். பெங்களூர், ஐதராபாத், மும்பை செல்லும்போது இதை பயன்படுத்துகிறேன். இதில் வரும் மொழிபெயர்ப்புகளும் அதற்கான குரலும் 70-90% சரியாகவே இருக்கிறது. வருங்காலங்களில் இதன் தரம் மேம்மேலும் மெருகேறும் என்பதில் துளியும் ஐயமில்லை. ஆகையால் நமக்கு எந்த இணைப்பு மொழியும் வேண்டாம்.  மேலும், ஞாலமெங்கும் அறிவிக்கப்படாத இணைப்புமொழியாக தற்போது செயல்பட்டுவரும் ஆங்கிலத்தின் பயன்பாட்டினை, இத்தொழிநுண்பங்கள், படிப்படியாகக் குறைத்திடும் என  எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது. பல நாடுகளில்/ஊர்களில் விரிந்திருக்கும் அலுவலகங்களிடையே தானியங்கி குரலுக்குகுரல் மொழிபெயர்ப்பிகளை இப்போதே பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். எழுதிவைத்துக்கொள்ளுங்கள், இன்னும் 5-10 ஆண்டுகளில் இணைப்புமொழி எனும் கூற்றே வழக்கொழிந்து போகும்.

இந்தியை உயிரோடு இருக்கச்செய்ய ஒன்றிய அரசு பெரியதொகை செலவிடுகிறது. இதில் ஓரு துளியளவுகூட மற்ற மொழிகளுக்கு செலவிடப்படுவதில்லை.

ஒன்றிய அரசானது, ஒற்றை மொழியின் வளர்ச்சிக்காக செலவிடுவதை விடுத்து, அத்தொகையை மொழிபெயர்ப்புத் தோழிநுட்பத்திற்காக செலவிடவேண்டும்.

மொழி என்பது ஒரு தொடர்பு ஊடகம் மட்டுமல்ல, அது அம்மொழி பேசுபவரின் பண்பாடுகளை சுமந்துசெல்லும் ஊர்தியும் கூட.

இக்கட்டுரையானது, ஒரு தனிப்பட்ட மொழியின் மீதான வெறுப்பின் வெளிப்பாடல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நான் ஒரு மொழியியல் ஆர்வலர். ஞாலத்திலுள்ள பல மொழிகளின் வளங்களைக் கண்டு வியந்துகொண்டிருப்பவன். பன்மைத்தன்மை, அதிலும் மொழிகளின் பன்மை தான் நம் துணைக்கண்டத்தின் அழகே. ஆனால், இங்கு பலரும் அரசியலாளர்களும் அமைப்புகளும் ஏன் நம் அரசமைப்புசட்டத்தின் சில பகுதிகளுமே இப்பன்மைத்தன்மைக்கு, குறிப்பாக மொழிப்பன்மைக்கு, நேரடியான எதிர்ப்புக் கொள்கையைக் கொண்டுள்ளன.

எல்லாவற்றிலும் 'பொது', 'நாட்டுப்பொது' என்பதைத் திணித்து மக்களை 'தன்னடையாளம்-துறந்த' ஓர் நிறத்தவர்களாக மாற்ற முனைந்திட வேண்டாம். ஒரு மொழியை முன்னெடுப்பது என்பது நாட்டுமக்கள் ஒற்றுமைக்கோ ஒருமைப்பாடுக்கோ அல்ல, மாறாக நாட்டு மக்களின் தனிப்பட்ட மொழி அடையாளங்களின்பால் தாழ்வுணர்வு ஏற்படச்செய்து காலப்போக்கில் அவ்வடையாளங்களற்ற ஓர் நிறத்தவர்களாக மாற்றிடவே ஆகும்.  "இந்தியை யார் திணிக்கிறாரகள்? அதனை துணைமொழியாகக் கற்றுக்கொள்ளுங்கள் என்று இந்தியை முன்னெடுக்கத்தானே செய்கிறோம்.." என பலர் கூறக் கேட்டிருப்பீர்கள் தானே. விழித்துக்கொள்ளுங்கள், 'முன்னெடுப்பு' என்பது வெல்லப்பாகில் தோய்த்த 'திணிப்பு' தான்...

ஆக, எதைக் கற்பது என்பது நம் தனிப்பட்ட விருப்பம், அது நம் அடிப்படை உரிமையும்கூட. அவ்வுரிமையைப் பறித்து வேறொன்றை கட்டாயமாகத் திணித்திட யாருக்கும் உரிமையில்லை.
தேவை: 
#மொழிநிகர்மை
#PromoteLinguisticEquality
#StopHindiImposition
#StopHindiImperialism
அடித்துச் சொல்கிறேன், 99% இந்தியர்களுக்கு எதுவுமே தெரியாது.  ஆகையால், இவை அனைத்தையும் பற்றி, குறிப்பாக இந்திய மொழிகளுக்கு திட்டமிட்டு இழைக்கப்படும் அநீதியையும் மொழி நிகர்மை உரிமை பற்றியான விழிப்புணர்வு ஊட்டிடவும் பல பொதுவெளிகளிலும் சமூக ஊடகங்களிலும் உரக்கப் பேசிடுங்கள்.  
குறிப்பு: எண்மியமயமான ஆதிக்க மொழிகளும் சூழ்ச்சிகளும் சூழ்ந்த இஞ்ஞாலத்தில், எழுத்துகளற்ற மொழியானது பிழைத்துத் தாக்குப்பிடிப்பது கடினம். அம்மொழி பேசிடும் மக்களின் பண்பாட்டுச் சின்னங்களிலிருந்தும் பேசுமொழி அமைப்பிலிருந்தும் தத்தங்களுக்கான எழுத்துமுறைகளை உருவாக்கி அரசின் உதவியில் மிகவிரைவில் முழுவீச்சில் பொதுவெளியிலும் பள்ளிகளிலும் பயன்படுத்தத் துவங்கிடவேண்டும்.  எழுத்தற்ற மொழிகள் தங்கள் உயிர்ப்புக் காலத்தை கிட்டத்தட்ட ஏற்கனவே தாண்டிவிட்டன.  அவற்றிற்கான கடைசிகட்ட  உயிர்நாடி ஒலிகள் உரக்கக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இவை தொடர்பான தகவல்களுக்கு:

௨} இந்தி பிற மொழிகளை அழிக்கிறதா? - கண்ணன்@கோரா

௩} அருணாச்சலப் பிரதேச மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளன

௪} அருணாச்சலப் பிரதேச மொழிகள் அழிகின்றனவா?

௫} அருணாச்சலப் பிரதேச மொழிகளை அழிவிலிருந்து காத்திடுங்கள்/

௬} தமிழ் நாட்டின் இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டங்கள் - @விக்கி

௭} 1937–40 காலகட்டத்தில் நடந்த இந்தி மொழித் திணிப்பு எதிப்புப் போராட்டம்

௮} மொழி உரிமையும் நாட்டு ஒற்றுமையும் - க.திருநாவுக்கரசு, இந்து.தமிழ்

௯} மொழி நிகர்மை வேண்டும் - புகார்

௧०} மொழிநிகர்மை பற்றி தென்னாபிரிக்க நாட்டு அரசமைப்புச்சட்டம்

௧௧} மொழியுரிமை

௧௨} மொழிநிகர்மை - @கூகிள்

௧௩} மொழிநிகர்மை - தமிழில் -@கூகிள்

தன்மானத்தமிழர்களே!!

 நேற்று மதியம், நான் நெல்லைக்குச்செல்லும் தொடர்வண்டியில் வீரவநல்லூர் நிலையத்திலிருந்து ஏறிக்கொண்டேன். அது ஒரு பொதுப்பயணிகள் வண்டி. கூட்டம்னாகூட்டம் அவ்வளவுகூட்டம். சிறிது நேரத்தில் மூச்சுவிடக்கூட இடமில்லை எனபதை உணர்ந்துகொண்டேன். கதிரவர் தன் கொடூரக்குசும்பை சிறப்புர செய்துகொண்டிருந்தார். முகம் கைகால் முதுகு என அனைத்து வெளி உறுப்புகளிலும் வியர்வையாறு ஊற்றெடுத்து கீழ்திசையை நேக்கி ஓடி கால்களை எட்டும்முன் அனல்க்காற்றுடன் கலந்திருந்தது. சிலசில பெண்களைத்தவிர பெரும்பாலும் ஆண்களே என் பெட்டியில் நிறைந்திருந்தனர். காலையிலிருந்து திருப்புடைமருதூர், வீரவநல்லூர், தாமிரபரணி எனச்சுற்றியதால் கால்கள் என்னிடம் மண்டியிட்டு கெஞ்சிக்கொண்டிருந்தன. அடுத்தடுத்த நிறுத்தங்களில் பெட்டிகளில் மேன்மேலும் மக்கள் சாக்குமூட்டையில் உப்பை குலுக்கி அடைப்பதைப்போன்று ஏற்றிக்கொண்டிருந்தார்களே தவிர யாருக்கும் இறங்க மனம் இருப்பதாகவே தெரியவில்லை. கூட்ட நெரிசலில் என்னை நான் ஒரு எஸ்பிரசோ குளம்பிக்கருவியில் மிகையாக பிழியப்படும் குளம்பிப்பொடியாகவும் கேரளாவுக்கு ஏற்றிச்செல்லப்படும் அடிமாடாகவும் நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். என் இடதுபுறத்தில், கையி்ல் உறைபோட்ட பைபிள் வைத்து மேல் தலையை தன் சீலைத்தலைப்பால் மூடிக்கொண்டிருந்த நடுத்தர அகவை கொண்ட மாமி, வெகுநேரமாக ஆழ்ந்த செபத்தில் இருந்தார். அவர் தலையை லேசாக ஆட்டியாட்டி உள்ளத்தினுள் பாடிக்கொண்டிருந்த தோத்திரப்பாடல்கள் என் காதுகளுக்கு கேட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். வண்டி வேகமாகச்சென்றுகொண்டிருந்தது. அவ்வப்போது ஒரு குழந்தை அழுகுரல் வேறு கேட்டுக்கொண்டிருந்தது. என் வலதுபுறம், ஒரு முழு வெள்ளை சிப்பாவும் குல்லாவும் போட்டுக்கொண்டிருந்த குறுந்தாடி மாமா, வாயில் வெற்றிலைபாக்கை விடுவதில்லை என வெகுநேரமாக கொதப்பிக்கொண்டிருந்தார். அவ்வப்போது வானத்தைநோக்கி வாய்பிளந்து களகள என ஓசை எழுப்பிக்கொண்டிருந்தார். அவருக்கு உமிழும் நேரமாகிவிட்டது என எண்ணிக்கொண்டேன். சாளரம்வேறு சற்று தொலைவில் இருந்தது. அவர் சளைக்காமல் குதப்பிக்கொண்டிருத்தார். "ஒருவேளை திடீரென தும்மல் வந்தால் என்ன செய்வார்" என திரடீரென எனக்கு ஒரு கேள்விவேறு உள்ளத்தில் எழும்பியநேரம் அந்தமாமா தன் கண்களை அகலவிரித்தவாறு டக்கென என்னை திரும்பிப்பார்த்தார். என் தலையை வேறுபுறம் திருப்பிக்கொண்டேன். என் உள்ளத்தின் உரையாடல் அவருக்கு கேட்டிருக்குமோ? வண்டியின் வேகம் குறைந்தது. என்ன நிறுத்தம் என எட்டிப்பார்த்தேன். 'பேட்டை'. அடுத்ததற்கடுத்த நிறுத்தம் நெல்லை சந்திப்பு, என்ற நினைப்பு நிம்பதிப்பெருமூச்சு விடச்செய்தது. வெளியே, நிறுத்தத்திற்கு பின்புறம் சிறிதுதொலைவில் ஒரு நியாயவிலைக் கடையில் மிகையான கூட்டம் நின்றுகொண்டிருப்பது சாளரம் வழியாக தெளிவாக தெரிந்தது. வண்டி நின்றதுதான் தாமதம், தபதபவென ஆண்கள் பெட்டியை விட்டு முண்டியடித்துக்கொண்டு இறங்கலாயினர். இதைப்பார்த்ததும் எனக்கு ஒருநொடி பக் என்றது, ஏதேனும் கலவரமாக இருக்குமோ என்று. இது கலவர பூமியாச்சே! இவ்வூரில் 20 ஆண்டுகளுக்குமுன் நடந்த இரு கலவரங்களை நேரில் கண்டவன் நான். இன்னும் சில வினாடிகளில் மொத்த பெட்டியும் கிட்டத்தட்ட காலியாகிவிடும் போலிருந்தது. உடனே பக்கத்தில் இருந்த குல்லா மாமாவிடம் "என்ன" என வினவினேன். அவர் என்னிடம் வாயை ஒ-வெனக்குவித்து ஏதோ சொல்லவந்து, பின்னர் உதட்டை உள்மடித்து வாய்மூடி வெளியே அந்த நியாயவிலைக்கடையை கைநீட்டிக் காண்பித்தார். திரும்பவும் குனிந்து சாளரம் வழியாகப்பார்த்தேன். வண்டியிலிருந்து இறங்கிய அத்தனைபேரும் அந்த கடையைநோக்கி முண்டியடித்து குதித்து ஓடிக்கொண்டிருந்தனர். பலர் தங்கள் வேட்டி லுங்கி முடிப்புகளை பிடித்தவாறே ஓடிக்கொண்டிருந்தனர்! எனக்கு ஒன்றும் புரியவில்லை. திரும்பவும் அந்த மாமாவிடம் என் புருவம் சுழித்து 'என்ன இது?' என் கைச்சைகையில் கேட்டேன். இம்முறை அவர் தன் வாயைத்திறக்க முயற்சிக்காமல், விரல்கள் மடக்கி கட்டைவிரல் நீட்டி தண்ணீர் குடிப்பதுபோல் காண்பித்தார். அப்போதுதான் எனக்கு பொறிதட்டியது. ஆகா, இவர்களெல்லாம் நம் தங்கத்தமிழ்நாட்டுத்தன்மானத்தமிழ்குடிமக்கள் எனபதும் தொலைவில் தென்பட்டது நியாயவிலைக்கடை எனபதும் விளங்கிற்று. ஆனால், இவர்கள் தத்தங்கள் ஊரிலுள்ள டாஸ்மாக் கடைகளில் மது அருந்தாமல் தொடர்வண்டி ஏறி, ஏன் இந்த 'பேட்டை'க்கு அருந்த வந்திருக்கிறார்கள்? என்று எனக்குள் ஏற்பட்ட ஐயம் பக்க இருக்கையில் அமர்ந்திருந்தவருக்கும் எழுந்து, அவர் தன்னெதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவரிடம் வினவிவிட்டார். அவர் உரக்க அளித்த விளக்கம் இதுதான்: சுற்றுவட்டாரங்களில் அத்தனை டாஸ்மாக் கடைகளும் நெடுஞ்சாலைகளின் அருகாமையிலேயே அமைந்திருந்தன என்றும், சமீபத்திய உச்சநீதிமன்றத்தின் ஆணையால் அத்தனையும் மூடப்பட்டுவிட்டன என்றும் பேட்டையிலிருந்து 40-50 கி.மீ.யில் தொடருந்துப்பாதையில் இருக்கும் எந்த ஊரின்அருகிலும் தற்போது டாஸ்மாக் கடைகள் இல்லை என்றும் அவர் கூறினார். நெல்லை சந்திப்புக்கு பேட்டையிலிருந்து மிகச்சில பயணிகளுடனே புறப்பட்டது. அதனை நெல்லை சந்திப்பிலும் உணர்ந்தேன். நிலையம் விட்டு வெளியே வருவதற்காக நடைமேடையில் நடந்துகொண்டிருந்தபோதுதான், நம் குல்லா மாமாவை மீண்டும் கவனித்தேன். அவர் அங்கிருந்த கைகழுவும் குழாயடியில் வாயை கழுவி, ஆள்காட்டி விரலால் கொதகொத என தன் பற்களைத்தேய்த்து தூய்மையாக்கிக்கொண்டிருந்தார்.....

தமிழ் எண் முறைகள்!!! (பேரெண்கள்)

 தமிழ் எண் முறைகள்!!! (பேரெண்கள்)

தமிழ் எண் முறைகள் குறிப்பாக பேரெண்கள் பற்றி இணையத்தில் துழாவியபோது கீழ்க்காணும் சில முறைகள் தென்பட்டன.
(1) பழந்தமிழ் முறை: 
இதைப்பற்றி https://en.wikipedia.org/wiki/Tamil_numerals விளக்குகிறது. ஆனால் இந்த முறை எங்கெங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது, எந்தெந்த நூல்களிலிருந்து எடுக்கப்பட்டது பற்றியான எந்த ஆதாரமும் குறிப்பிடவில்லை.
(2) சங்கத சார்புள்ள முறை: 
இதைப்பற்றி
ஆகிய விக்கி பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் (அ)வுக்கும் (இ)க்குமே வேறுபாடு உள்ளது,
(3) சங்கத முறை:
இதைப்பற்றி https://en.wikipedia.org/wiki/Indian_numbering_system எனும் விக்கி பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது. சங்கத எண் முறையானது வால்மீகி இராமாயணத்தில் யுத்தகாண்டத்தில் 28ஆம் சர்கத்தில் 34 முதல் 38 ஆம் பாடல்களில் இந்த முறை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. (http://www.valmikiramayan.net/yuddha/sarga28/yuddhaitrans28.htm#Verse34)
கீழே உள்ள பட்டியலில் இது பற்றி விளக்கியிருக்கிறேன்.

அடுக்கு

பழந்தமிழ்(1)

சங்கத சார்பு(2)

சங்கத சார்பு(2)

சங்கத முறை(3)

பொது வழக்கு

10¹

பத்து

பத்து

பத்து

தசம்

பத்து

10²

நூறு

நூறு

நூறு

சதம்

நூறு

10³

ஆயிரம்

ஆயிரம்

ஆயிரம்

சகசுரம்

ஆயிரம்

10⁴

பத்தாயிரம்

பத்தாயிரம்

பத்தாயிரம்

அயுதம்

பத்தாயிரம்

10⁵

நூறாயிரம்

இலட்சம்

இலட்சம்/நியுதம்

இலட்சம்

இலட்சம் நூறாயிரம்

10⁶

மெய்யிரம்

பத்துலட்சம்

பத்துலட்சம்

நியுதம்

பத்துலட்சம் மில்லியன்

10⁷

பத்து மெய்யிரம்

கோடி

கோடி

கோடி

கோடி பத்துமில்லியன்

10⁸

நூறு மெய்யிரம்

பத்துகோடி

அற்புதம்

:

பத்துகோடி /நூறுமில்லியன்

10⁹

தொள்ளுண்

அற்புதம்

நிகற்புதம்

:

நூறுகோடி பில்லியன்

10¹⁰

பத்து தொள்ளுண்

:

கும்பம்

:

ஆயிரங்கோடி /பத்துபில்லியன்

10¹¹

:

நிகர்ப்புதம்

கணம்

:

பத்தாயிரங்கோடி /நூறுபில்லியன்

10¹²

ஈகியம்

:

கற்பம்

சங்கு(சங்கம்)

இலச்சங்கோடி /திரில்லியன்

10¹³

:

கர்வம்

நிகற்பம்

:

பத்துலச்சங்கொடி /பத்துதிரில்லியன்

10¹⁴

:

:

பதுமம்

:

கொடி² / நூறுதிரில்லியன்

10¹⁵

நெளை

சங்கம்

சங்கம்

:

பத்துகோடி² / குவாதிரில்லியன்

10¹⁶

:

:

வெள்ளம்/சமுத்திரம்

:

நூறுகோடி² / பத்துகுவாதிரில்லியன்

10¹⁷

:

அர்த்தம்

அந்நியம்

மகாசங்கு

ஆயிரங்கோடி² / நூறுகுவாதிரில்லியன்

10¹⁸

இளஞ்சி

:

அர்த்தம்

:

பத்தாயிரங்கோடி² / குவிந்தில்லியன்

10¹⁹

:

பூரியம்

:

:

இலச்சங்கோடி² / பத்துகுவிந்தில்லியன்

10²⁰

வெள்ளம்

:

:

:

பத்துலச்சங்கோடி² / நூறுகுவிந்தில்லியன்

10²¹

ஆம்பல்

முக்கொடி

:

:

கோடி³ / சேக்சுடில்லியன்

10²⁵

:

மாயுகம்

:

:

பத்தாயிரங்கோடி³ / பத்துசெப்தில்லியன்

10³²

:

:

:

பத்மம்

பத்தாயிரங்கோடி⁴ நூறு நோனில்லியன்

10³⁷

:

:

:

மகாபத்மம்

நூறுகோடி⁵ பத்து அன்டெசில்லியான

10⁴²

:

:

:

கர்வம்

கோடி⁶ /தெரெதெசில்லியன்

10⁴⁷

:

:

:

மகாகர்வம்

இலச்சங்கோடி⁶ நூறு குவாடோர்டெசில்லியன்

10⁵²

:

:

:

சமுத்திரம்

ஆயிரங்கோடி⁷ பத்து செக்சுடெசில்லியன்

10⁵⁷

:

:

:

ஓகம்

பத்துகோடி⁸ /ஆக்டோடெசில்லியன்

10⁶²

:

:

:

மகௌகம்

பத்துலச்சங்கோடி⁸ நூறு நோவெம்டெசில்லியன்

இவற்றுள் எது சரியானது என்பதைக் கண்டறிந்து முறைப்படுத்தவேண்டும் நினைக்கிறேன்.
தமிழெண்கள் பற்றியான மேலும்பல முரண்கள்கொண்ட இன்னபிற தரவுகளின் இணைப்புகள்:
1) https://ta.wikipedia.org/wiki/தமிழ்_எண்களின்_பெயர்_விளக்கம்
2) https://ta.wikipedia.org/wiki/ஆம்பல்_(எண்)
3) http://www.tamilvu.org/ta/courses-degree-d011-d0114-html-d0114820-19124
4) https://ta.wikisource.org/wiki/பக்கம்:தமிழ்மொழி_இலக்கிய_வரலாறு.pdf/274
5) http://itsmytamil.blogspot.com/2009/10/1022.html ( மகாதோரை, மகாநிகற்பம், மகாமகரம், மகாவரி, மகாவற்புதம்... பற்றியான குறிப்பு ஒன்று இதில் உள்ளது! )
6) https://pari.wordpress.com/2004/05/06/மின்னல்-ஒரு-கோடி-லட்சம்-ப
7) http://www.tamilvu.org/ta/courses-degree-a051-a0512-html-a0512512-9715 (சங்கம் பேரெண் பற்றியான குறிப்பு)
(2), (3) இல், ஆம்பல் மற்றும் வெள்ளம் பற்றி கபிலர் குறிப்பிட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது,
 

தமிழில் எண் பயன்பாட்டில் இரு எண்ணாக்க முறைகள் உள்ளன. அவை:
௧} பழையமுறை - கல்வெட்டுகளில் காணப்படுவது. இது நேரடிக் கணக்கு முறைகளுக்குப் பயன்படாது என்றாலும் சில எண்களை மிகச்சுருக்கி எழுதலாம். மேலும் இம்முறையில் சுழியம் கிடையாது.

௨} புதியமுறை - அச்சுப்பொறி வந்தபிறகு புழக்கத்தில் வந்தது. இது இந்தோஅரபுமுறைக்கு ஒப்பானது.

சிலபல கருத்துகளை பட்டியலிடும்போது அவற்றுக்கான வரிசை எண்களாக (I,II,III,IV,V.. என்ற உரோமானிய எண்ணாக்க முறையைப் பயன்படுத்தும் வழக்கம் இருப்பதுபோல) இவ்விரு முறைகளையும் பயன்படுத்தலாம்.

கீழ்காணும் பட்டியலில் "இந்தோஅரபுமுறை==புதியமுறை==பழையமுறை" என்றவாறு விளக்கியுள்ளேன்.

0==०==பாழ்
1==௧==௧
2==௨==௨
3==௩==௩
4==௪==௪
5==௫==௫
6==௬==௬
7==௭==௭
8==௮==௮
9==௯==௯
10==௧०==௰
11==௧௧==௰௧
12==௧௨==௰௨
13==௧௩==௰௩
14==௧௪==௰௪
:
18==௧௮==௰௮
19==௧௯==௰௯
20==௨०=௨௰
21==௨௧=௨௰௧
22==௨௨==௨௰௨
23==௨௩==௨௰௩
:
29==௨௯==௨௰௯
30==௩०==௩௰
41==௪௧==௪௰௧
64==௬௪==௬௰௪
98==௯௮==௯௰௮
99==௯௯==௯௰௯
100==௧००==௱
101==௧०௧==௱௧
110==௧௧०==௱௰
111==௧௧௧==௱௰௧
120==௧௨०==௱௨௰
199==௧௯௯==௰௯௱௯
200==௨००=௨௱
201==௨०௧==௨௱௧
210==௨௧०==௨௱௰
220==௨௨०==௨௱௨௰
222==௨௨௨==௨௱௨௰௨
567==௫௬௭==௫௱௬௰௭
999==௯௯௯==௯௱௯௰௯
1000==௧०००==௲
1001==௧००௧==௲௧
1010==௧०௧०==௲௱
2000==௨०००==௨௲
2345==௨௩௪௫==௨௲௩௱௪௰௫
9999==௯௯௯௯==௯௲௯௱௯௰௯
10000==௧००००==௰௲
54321==௫௪௩௨௧==௫௰௪௲௩௱௨௰௧
100000==௧०००००==௱௲
1000000==௧००००००==௲௲
10000000==௧०००००००==௰௲௲



பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...