Friday, February 4, 2022

மேலக் குமரித்தமிழ்ப் பழமொழிகள் (குழந்தைகளுக்கானதல்ல)

 மேலக் குமரித்தமிழ்ப் பழமொழிகள்

(குழந்தைகளுக்கானதல்ல)

குமரிநாட்டின் மேற்குப்பகுதியான விளவங்கோடு-கல்குளம் வட்டத்து மக்கள் பயன்படுத்தும் பழமொழிகள் பலவற்றை  ஒரு நகைச்சுவையான உரையாடல் போலத் தொகுத்துள்ளார் எழுத்தாளர் திரு செயமோகன்:-

https://www.jeyamohan.in/732/

இதில் வரும் பழமொழிகள்:-

௧} ஆனை கெடந்து சவிட்டு பெடுது, பின்னயில்லா ஆனைப்பிண்டம்?

௨} தீட்டத்தில அரி பெறக்குறவன்

௩} தொளவடைக்கு ஒரு தொளையானா தோசைக்கு ஆயிரம் தொள.

௪} குண்டி களுவின வெள்ளம் விளுந்து மொளச்சவன்.

௫} மார்த்தாண்டவர்மாவுக்கு கசாயம் போடுகதுக்கு கொட்டைய பிடுங்கி குடுத்தாண்ணாக்கும்

௬} மகாராசா இங்கிணதான் தாற அவுத்தாருண்ணு திண்ணையக் காட்டுவான்.

௭} நாயி மாதிரி ஒரெடத்தில தண்ணி குடிச்சு ஒம்பதெடத்தில மோளுதவன்லா?

௮} மச்சுல காஞ்ச மூத்த தேங்கால்லா? ஏது வெள்ளத்திலயும் மெதப்பான்

௯} பைசாய எண்ணிட்டு அதுக்க சிங்கத்தையுமில்லா எண்ணுகான்?

௧०} நிலாவெட்டத்தில நிரோத்து தைச்சு போடுத பய

௧௧} மலைத்தண்ணிக்கு மட்டுண்டா

௧௨} தவள சாடி பசுவுக்கு செனைன்னா கேக்கவனுக்கு மனசிலாவ வேண்டாமா?

௧௩} விதியத்தவன் வாறது பாத்தா, தெங்கு, மட்டையப் போடுது?

௧௪} ஏழு நீலி சேந்து கேறின அம்மன் கொண்டாடி மாதிரி

௧௫} ஆட்டுக்கு வாலும் கழுதைக்குக் கோலும்

௧௬} அவளுக்க வாயிலே ஒரு பிடி நெல்லு வாரியிட்டா பொரியாவும்

௧௭} கல்லு நிக்கா காலம் வரையில்லா, சொல்லு நிக்கும்

௧௮} எனக்க அம்மைக்க முலையில மூத்திரமாவே வந்தது?

௧௯} ஆனமேல கேறினா விட்டிலும் நெளிஞ்சுதான் இருக்கும்

௨०} ஒருபாடு நெளிஞ்ச மூங்கிலு பல்லக்கு தூக்கும்

௨௧} பல்லு நிரப்பு கொண்டுல்ல அழகு வாறது; சொல்லு நிரப்பு வேணும்

௨௨} நாய் பெற்ற எடமும் நாரி மூப்பெடுத்த எடமும் வெளங்குமா?

௨௩} கடுவனுக்கு மூத்திரம் அடியோடி பெட்டைக்கு மூத்திரம் பொறத்தோடி

௨௪} இஞ்சிக்காட்டில வெளைஞ்சா சீனிக்கெழங்கும் காந்தும்

௨௫} சுக்க காட்டிலும் சுக்கு காப்பி எரிக்கப்பிடாதுல்ல..!?

௨௬} செட்டி ஏட்டில குறிக்கது மாதிரியாக்கும்.

௨௭} எண்ணமறியா எலி எண்ணாயிரம் குட்டி போடுத மாதிரியாக்கும்

௨௮} ஊத்துல பிறந்த விராலுக்கு ஆறு என்னலே தெரியும்

௨௯} குளிக்கொளம் எவ்ளவு குண்டி கண்டிருக்கும்.

௩०} நாட்டு நாயை நாடறியாட்டாலும் நாயறியணும்ல?

௩௧} கெழக்கே கோட்டையில மொளை கொண்டு போனா ஒனக்கென்ன

௩௩} சக்கை கொழையும்போது சக்கைக்குருவும் கொழையாது

௩௪} குடுமியிலெ தீ பிடிச்சா பேனுக்கு கேடுண்ணு நெனைக்கப்பட்டவனாக்கும்

௩௫} எருமையிட்ட சாணி மாதிரி

௩௬} பூவில்லேண்ணா எலையிருக்கணும். எலையில்லேண்ணா முள்ளிருக்கணும்

௩௭} அவனவன் கொட்டைக்க கனம் அவனவனுக்குல்லா தெரியும்.

௩௮} வைக்கலப் போட்டு தீய அணக்கிற மாதிரி 

௩௯} தீண்டாரி துடைச்ச துணி கணக்கா

௪०} செத்தவனை நெனைச்சு பத்து பத்தினி அழுதாண்ணு கதையா

௪௧} படை பயந்து பந்தளத்துக்கு போனா அங்கிண பந்தம் கெட்டிப்படை நிக்குது

௪௨} நாறப் பீயானாக்கூட அதையும் உருட்டிக்கிட்டுப் போறதுக்கு ஒரு சீவனை உண்டாக்கியிட்டுண்டு படச்சவன்.

௪௩} பாம்பு சட்டைய உருவிச்சுண்ணு பரமன் கோமணத்த உருவினான்னு சொன்ன கதையா

௪௪} ஆன குடுத்தாலும் ஆசை குடுக்கிலாமாலே?

௪௫} உனக்கம்மைக்கு ஒரு நெனைப்பு வந்திருந்தா நீ எனக்க பிள்ளையாக்கும்

௪௬} பனையோலையிலே நாயி மோண்ட கதையா

௪௭} நெறைஞ்ச ஆலமரத்துக்கு நெலமெல்லாம் வேருண்ணு சொன்ன மாதிரி

௪௮} நிலாவு கண்டு நாயி கொரைச்சா நிலாவுக்கு என்ன?


No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...