மேலக் குமரித்தமிழ்ப் பழமொழிகள்
(குழந்தைகளுக்கானதல்ல)
குமரிநாட்டின் மேற்குப்பகுதியான விளவங்கோடு-கல்குளம் வட்டத்து மக்கள் பயன்படுத்தும் பழமொழிகள் பலவற்றை ஒரு நகைச்சுவையான உரையாடல் போலத் தொகுத்துள்ளார் எழுத்தாளர் திரு செயமோகன்:-
இதில் வரும் பழமொழிகள்:-
௧} ஆனை கெடந்து சவிட்டு பெடுது, பின்னயில்லா ஆனைப்பிண்டம்?
௨} தீட்டத்தில அரி பெறக்குறவன்
௩} தொளவடைக்கு ஒரு தொளையானா தோசைக்கு ஆயிரம் தொள.
௪} குண்டி களுவின வெள்ளம் விளுந்து மொளச்சவன்.
௫} மார்த்தாண்டவர்மாவுக்கு கசாயம் போடுகதுக்கு கொட்டைய பிடுங்கி குடுத்தாண்ணாக்கும்
௬} மகாராசா இங்கிணதான் தாற அவுத்தாருண்ணு திண்ணையக் காட்டுவான்.
௭} நாயி மாதிரி ஒரெடத்தில தண்ணி குடிச்சு ஒம்பதெடத்தில மோளுதவன்லா?
௮} மச்சுல காஞ்ச மூத்த தேங்கால்லா? ஏது வெள்ளத்திலயும் மெதப்பான்
௯} பைசாய எண்ணிட்டு அதுக்க சிங்கத்தையுமில்லா எண்ணுகான்?
௧०} நிலாவெட்டத்தில நிரோத்து தைச்சு போடுத பய
௧௧} மலைத்தண்ணிக்கு மட்டுண்டா
௧௨} தவள சாடி பசுவுக்கு செனைன்னா கேக்கவனுக்கு மனசிலாவ வேண்டாமா?
௧௩} விதியத்தவன் வாறது பாத்தா, தெங்கு, மட்டையப் போடுது?
௧௪} ஏழு நீலி சேந்து கேறின அம்மன் கொண்டாடி மாதிரி
௧௫} ஆட்டுக்கு வாலும் கழுதைக்குக் கோலும்
௧௬} அவளுக்க வாயிலே ஒரு பிடி நெல்லு வாரியிட்டா பொரியாவும்
௧௭} கல்லு நிக்கா காலம் வரையில்லா, சொல்லு நிக்கும்
௧௮} எனக்க அம்மைக்க முலையில மூத்திரமாவே வந்தது?
௧௯} ஆனமேல கேறினா விட்டிலும் நெளிஞ்சுதான் இருக்கும்
௨०} ஒருபாடு நெளிஞ்ச மூங்கிலு பல்லக்கு தூக்கும்
௨௧} பல்லு நிரப்பு கொண்டுல்ல அழகு வாறது; சொல்லு நிரப்பு வேணும்
௨௨} நாய் பெற்ற எடமும் நாரி மூப்பெடுத்த எடமும் வெளங்குமா?
௨௩} கடுவனுக்கு மூத்திரம் அடியோடி பெட்டைக்கு மூத்திரம் பொறத்தோடி
௨௪} இஞ்சிக்காட்டில வெளைஞ்சா சீனிக்கெழங்கும் காந்தும்
௨௫} சுக்க காட்டிலும் சுக்கு காப்பி எரிக்கப்பிடாதுல்ல..!?
௨௬} செட்டி ஏட்டில குறிக்கது மாதிரியாக்கும்.
௨௭} எண்ணமறியா எலி எண்ணாயிரம் குட்டி போடுத மாதிரியாக்கும்
௨௮} ஊத்துல பிறந்த விராலுக்கு ஆறு என்னலே தெரியும்
௨௯} குளிக்கொளம் எவ்ளவு குண்டி கண்டிருக்கும்.
௩०} நாட்டு நாயை நாடறியாட்டாலும் நாயறியணும்ல?
௩௧} கெழக்கே கோட்டையில மொளை கொண்டு போனா ஒனக்கென்ன
௩௩} சக்கை கொழையும்போது சக்கைக்குருவும் கொழையாது
௩௪} குடுமியிலெ தீ பிடிச்சா பேனுக்கு கேடுண்ணு நெனைக்கப்பட்டவனாக்கும்
௩௫} எருமையிட்ட சாணி மாதிரி
௩௬} பூவில்லேண்ணா எலையிருக்கணும். எலையில்லேண்ணா முள்ளிருக்கணும்
௩௭} அவனவன் கொட்டைக்க கனம் அவனவனுக்குல்லா தெரியும்.
௩௮} வைக்கலப் போட்டு தீய அணக்கிற மாதிரி
௩௯} தீண்டாரி துடைச்ச துணி கணக்கா
௪०} செத்தவனை நெனைச்சு பத்து பத்தினி அழுதாண்ணு கதையா
௪௧} படை பயந்து பந்தளத்துக்கு போனா அங்கிண பந்தம் கெட்டிப்படை நிக்குது
௪௨} நாறப் பீயானாக்கூட அதையும் உருட்டிக்கிட்டுப் போறதுக்கு ஒரு சீவனை உண்டாக்கியிட்டுண்டு படச்சவன்.
௪௩} பாம்பு சட்டைய உருவிச்சுண்ணு பரமன் கோமணத்த உருவினான்னு சொன்ன கதையா
௪௪} ஆன குடுத்தாலும் ஆசை குடுக்கிலாமாலே?
௪௫} உனக்கம்மைக்கு ஒரு நெனைப்பு வந்திருந்தா நீ எனக்க பிள்ளையாக்கும்
௪௬} பனையோலையிலே நாயி மோண்ட கதையா
௪௭} நெறைஞ்ச ஆலமரத்துக்கு நெலமெல்லாம் வேருண்ணு சொன்ன மாதிரி
௪௮} நிலாவு கண்டு நாயி கொரைச்சா நிலாவுக்கு என்ன?
No comments:
Post a Comment