Wednesday, January 19, 2022

மின்சாரம்

மின்சாரம் அது செமகாரம்...
மின்சாரம் அது செமகாரம்...

மக்கள்கூட்டம் இயங்கணுன்னா
மங்காமத் தேவைப்படும்.. மின்சாரம்..
மனம்போல உலவி வரும்
மேகங்கூடத் தேக்கி வைக்கும்.. மின்சாரம்..
மழைபெய்யும் நேரம் வந்தா
மின்னலாய்ப் பாயும் மின்சாரம்..

மின்சாரம் அது செமகாரம்...
மின்சாரம் அது செமகாரம்...

சீறிவரும் ஆறக்கூட அணகட்டித் தடுதோமுன்னா பீச்சி வரும் தண்ணீரிலே.. மின்சாரம்..
சின்னஞ்சிறு அணுவக்கூட பக்குவமா பிரிச்சோமுன்னா உள்ளிருந்து பாஞ்சுவரும்.. மின்சாரம்..
உந்தன் மூளை இயங்கணுன்னா அதுக்குத்தேவை மின்சாரம்..

மின்சாரம் அது செமகாரம்...
மின்சாரம் அது செமகாரம்...

நன்றி

No comments:

Post a Comment

தொண்ணூற்றொன்பது வகையான மலர்கள்

குறிஞ்சிப்பாட்டில் தலைவியும் தோழியரும் குவித்து வளையாடியதாக கபிலர் குறிப்பிடும் தொண்ணூற்றொன்பது வகையான மலர்களும் ...............