ஈரைப் பேனாக்கி
"ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கி..." என்னும் பழமொழிக்கு ஏதேனும் உட்பொருள் உள்ளதா?
அண்மையில் திரு இலங்கை செயராசு ஐயா மிக அருமையாக நடத்திவரும் உயர்வள்ளுவம் எனும் திருக்குறள் விளக்கப்பாடக் காணொளிகள் ( https://youtube.com/playlist?list=PLVt1jaSbMS3uEFOnVWJ0J2UU19mDJoBYj ) சிலவற்றைக் கண்டுகொண்டிருந்தேன்.. அதில் ஒவ்வொரு குறளுக்கும் பரிமேலழகரின் விரிவான விளக்கவுரைகளை எடுத்துரைத்து அவற்றை திரு செயராசு ஐயா நயம்பட விளக்குவதைக் கண்டு வியந்துகொண்டிருந்தேன்.. அப்போது, 'ஈரைப் பேனாக்கி..' என்ற பழமொழி எங்கிருந்தோ எதற்காகவோ என் நினைவுப்போக்கினுள் பளிச்சிட்டுச் சென்றது. உடனே, என் எண்ண ஓட்டம் அந்தப் பழமொழியை நோக்கிக் குவியத் தொடக்கியது.. 'பெருமாளை' வழிபடும் பரிமேலழகர், 'ஈர்' அடிக்குறள்களை, விரிவாக விளக்கியதுக்கும் இந்த பழமொழிக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்குமோ என எண்ணத் தோன்றிற்று. இருக்குமோ!?
அது தொடர்பாக இணையத்தில் சிறிது துழாவினேன். இப்பழமொழியின் பல பரிமாணங்களைக் காணப்பெற்றேன். அவற்றின் ஒன்றிப்பே இது:
"ஈரைப்/பொடுகைப் பேனாக்கி, பேனைப் [பெருச்சாளியாக்கி, பெருசாளியை [யானையாக்கி, யானையையை]] பெருமாளாக்கி நடுத்தெருவில் கொண்டுவிடுவது போல"பலர் "ஈறை" என எழுதியிருந்தார்கள். அந்தத்தேடலின் இடையே, திரு விசாலாட்சி என்பவர் விளக்கிவரும் சுவையான பழமொழிகளின் தொகுப்புக் காணொளிகளைக் காண நேர்ந்தது. அவை:-
No comments:
Post a Comment