மோழி ஈனுமா?
ஒரு மொழியியல் பார்வை.
தமிழும் பிற தென்னிந்திய மொழிகளும், தொலைவுறவு மொழிகளே. தாய்மகவுறவு கொண்டதல்ல.
தென்மொழிகளும் வடமொழிகளும் அடிப்படையில் எவ்வுறவும் கொண்டதல்ல. ஆனால் ஒன்றுக்கொன்று சொல் கடனாளிகள்.
தமிழ்தான் ஞாலத்து மொழிகளுக்கெல்லாம் தாய் என்று கூறுவதற்கும் சங்கதந்தான் ஞாலத்து மொழிகளுக்கெல்லாம் தாய் என்று கூறுவதற்கும் பெரிய வேறுபாடுகிடையாது. மொழியியலின் அடிப்படை அறியாது விடுத்திடும் கூற்று....
மொழி என்பது ஒரு பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சி இழை. அவ்வகையான தொடர்ச்சி இழைகளானவை, கிளை கொள்ளலாம், முற்றிலுமாக கவணிச் சிதறலாம், ஒன்றுக்கொன்று அருகாமையில் இணையாகப் பயணித்து ஒன்றுக்கொன்று கடனாளிகள் ஆகலாம், இரண்டறக்கலந்து ஓரிழை ஆகலாம், எண்ணுவொரற்று கருகிப்போகலாம், ஆர்வலர்களால் மீண்டும் உயிர்ப்பெறலாம்....... இந்தத் தொடர்ச்சியில் ஈனுறவு ஏற்படாது; மாறாக கிளையுறவும் ஒட்டுறவும் மட்டுமே உண்டு...
No comments:
Post a Comment