குறிக்கோள்
(குழந்தைகளுக்கானதல்ல)
::10000000000000000 மடங்கு பெரிதாக்கிக் காட்டல்....
வத்திக்குச்சியை கொளுத்தினால்கூட இருட்டாகத்தான் இருக்கும் அப்படி ஒரு கும்மிருட்டு. யாரோசிலர் லேசாக முணுமுணுப்பது மட்டும் தள்ளியிருந்து கேட்டது.. மற்றபடி அங்கு ஒரு மயான அமைதி. என்றாலும் என்னைச் சுற்றிமட்டுமே ஆயிரம் பேர் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருத்தரைச் சுற்றியும் எத்தனைபேர் நின்றுகொண்டிருக்கின்றனரோ. அப்படி ஒரு கூட்டம். மூச்சுவிடக்கூட இடமில்லை. இந்த கும்மிருட்டில் பக்கத்தில் நிற்கும் ஆயிரம் பேரையும் யார்யாரென எப்படிக் கண்டுகொள்வது. இப்படி விலாவிரியாச் சொல்கிறானே இவன் யாரென்று கேட்கிறீர்களா. என் பெயர் காமேசு அரவிந்தன். எப்படி, பெயர் நன்றாக இருக்கிறதா? பெயர் மட்டுமல்ல நன்றாக ஓடவும் செய்வேன். பிறந்ததிலிருந்து இதுநாள்வரை ஓட்டப்பயிற்சி மட்டும்தானே பெரும்பாலும் நடந்திருக்கு. எனக்கு மட்டும் இல்லை, இங்கு நிற்கும் அனைவருமே வேகமாக ஓடுவோம். ஆனால் பாருங்கள், போன வாரம் நடந்த பயிற்சிப் போட்டியில் தீபிகா அரவிந்தன் எங்கள் எல்லாரைவிடவும் சரசரவென்று வேகமாக ஓடி முதல் பரிசைப் வென்றுவிட்டாள். அதனால் ஒரு வாரமாக யாரையும் கண்டுக்காமல் மமதையில் திரிந்தாள் அந்தக் கிராதகி.
திடீரென நிலநடுக்கம் வந்தது போல மொத்த இடமுப் தடதடதடவென குலுங்கத்தொடங்கியது. எல்லாரும் அச்சத்தில் கூச்சலிடத் தொடங்கினர். குறிப்பாக பெண்கள் பெருத்த ஓசையில் "ஐயோ"வென கத்திவிட்டனர். என் கையை இறுக்கப் பிடித்துக்கொண்டு நின்ற நவீன் அரவிந்தன் "டேய், இது எப்படியும் இரிட்சர் அளவில் 9.2 ஆவது இருக்கும்" என்று கூறினான். அவனைக் கண்டுகொள்ளாதீர்கள். விக்கிபீடியாவில் அரைகுறையாய் எதையாவது படித்துவிட்டு இப்படி உளறுவான். பெரிய படிப்பாளி என்று காட்டிக்கொள்வான். வீல் என்ற விசில் ஒலி கேட்டது. "அமைதியாக இருங்கள்.. கூச்சல் போடாதீர்கள்... நம் நல்லதுக்குத்தானனே இது நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன.." இப்படி கரகரத்த குரலில் உரக்கப் பேசியது வேறு யிரும் இல்லை, அது நம் அணித் தலைவர் திருவாளர் இரகவன் அரவிந்தன். இரகவன் ஒரு மெழுகுவர்த்தி போல் ஒன்றைப் பற்றவைத்து அங்கிருந்த மேடையில் ஏறினான். அதன் வெளிச்சத்தில் அங்கு நின்றிருதோர் எல்லாம் தெளிவாகவே தெரிநதனர். "அன்பான உடன்பிறந்தோர்களே!" என இராகவன் உரக்கக் கூறவும் அது அந்த அரங்கத்தில் " ...களே.. களே... களே.." என எதிரொலித்தது. அரங்கம் அமைதியாயிற்று. ஆனாலும் இலேசான நிலநடுக்கம் இப்போதும் இருக்கத்தான் செய்தது. தொடரியில் செல்லும்போது ஆடுமே அதுமாதிரி நாக்களெல்லாரும் அலையலையாய் ஆடிக்கொண்டிருந்தோம். இராகவன் "ஒன்று.. இரண்டு.. மூன்று.." என வேகமாக எங்களை எண்ணத்தொடங்கினான். அவன் தான் எண்ணுவதில் புலியாச்சே, கண்ணிமைக்கும் நேரத்தில் எண்ணி முடித்திருந்தான். "எல்லாரும் கவனமாகக் கேட்டுக்கொள்ளுங்கள்.. நாம் மோத்தமாக இருபது இலட்சம்பேர் இருக்கிறோம்" அரங்கம் ஆடிக்கொண்டுதான் இருந்தது. இராகவன் தொடர்ந்தான் "நாட்டில் பொருளாதார நிலவரம் அவ்வளவாக நன்றாக இல்லை பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது நடக்கவிருக்கும் போட்டியில் உங்களில் யாராவது வெற்றி பெற்றுவிட்டாலும் வெளியில் போய் பன்முனைப் போட்டிகள் நிறைந்த சூழ்நிலையில் வெற்றிபெறுவது என்பது கடினமான ஒன்றாகத்தான் இருக்கும். அதனால் இப்பொழுதே உங்கள் உள்ளங்களை அதற்காக ஆயத்தப்படுத்திவைத்துக்கொள்ளுங்கள்..".
ஒரு குண்டூசியைப்போட்டால்கூட கிளாங் என்று வெண்கலப் பானையை பாறையில் போட்டமாதிரி ஓசை கேட்கும் அளவுக்கு ஒரு அமைதி. மூச்சு விடும் ஓசைகூடக் கேட்கவில்லை. ஆனால் அடுத்து நடக்கபாபோவதை யாரும் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. "நான் கப்பல் கட்டும் தொழிநுட்பத்தில் வல்லுனர் ஆவேன். இப்போது நிலவும்.பொருளாதார மந்த நிலையானது அந்தத்துறையை பாதிக்கவில்லை" எனக் கத்தினாள் சுவேதா அரவிந்தன். "நான் நுண்மிகளை ஆராயும் அறிஞர் ஆவேன்" என்றான் இளம்வழுதி அரவிந்தன். இரசனி அரவிந்தன் தன் கீச்சுக் குரலால் சொன்னாள் "என் வாழ்க்கைக் குறிக்கோளானது மாழைகளால் கட்டப்படும் கட்டிடங்களுக்கான வடிவமைபாபாளர்" என்று. சொன்னால் என்னை தப்பாக நினைக்கக்கூடாது, இரசனி அழகுனா அழகு அப்படியொரு அழகு, செம கட்டை!!. அதியமான் அரவிந்தன் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. அவன் பங்குச்சந்தை புள்ளியியல் ஆய்வாளர் ஆகவேண்டும் என்று சொன்னான். பலரும் அவரவர் விருப்பங்களைச் சொல்லியவண்ணம் இருந்தார்கள். இராகவன் அவற்றைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தான். தமன்னா அரவிந்தன் அன்னை தெரசாவைப்போல சமூக ஆர்வலராகவேண்டும் என்றாள், மோகன் அரவிந்தன் இரசினி,கமல் மாதிரி ஒரு புகழ்பெற்ற திரைப்படக் கலைஞர் ஆகவேண்டும் என்றான், அர்சனா அரவிந்தன் அந்தமான் நிகோபாருக்கு முதல்வர் ஆகவேண்டும் என்றாள், நான் எதுவுமே சொல்லவில்லை, நம் உள்ளத்து எண்ணங்களை எதுக்கு எல்லாரிடமும் சொல்லவேண்டும், எனக்கு ஒப்புதல் இல்லை. பொன்லிங்கம் அரவிந்தன் சொன்னதைக் கேட்டு எல்லாரும் கொஞ்சம் ஆடித்தான்போனார்கள். வேதங்கள் உபநிடதங்கள் எல்லாம் கற்று ஒரு துறவியாகி மக்களுக்கு பகவத் கீதையை போதனை செய்யவேண்டும் என்றான். "அட, இதெல்லாம் ஒரு குறிக்கோளாடா" என நவீன் என் காதருகே வந்து கூறினான். இதற்குமேல் பெறுமை இழந்த இராகவன் "போதும்.. போதும்..உங்கள் எண்ணங்கள் எல்லாம் ஈடேற என் உளம்நிறை வாழ்த்துகள்.. அடுத்தது நான் சொல்வதை........" திடீரென அரங்கத்தின் வேப்பம் சடசடவென கூடத்தொடங்கியது.. "நாம் கிளம்பும் நேரம் வந்துவிட்டது.." எனக் கத்தினான் இராகவன். "உங்கள் எல்லாருக்கும் என் அன்பு நிறைந்த முத்தங்களும் வாழ்த்துகளும்.. ஆயத்தமாக இருங்கள். நான் ஒன்று, இரண்டு, மூன்று சொல்லி விசில் ஊதியவுடன் மேற்குப் பக்கமாக இருக்கும் வாசல் வழியாக எல்லாரும் ஓடத் தொடங்குங்கள்.." நாங்கள் ஓடுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் ஆயத்தமானோம்..
1111111111111........
2222222222222222......
3333333333333333333.....
வீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.............
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.....
மேற்குக் கதவு தானாகவே திறந்துகொண்டது...
முடிந்தமட்டில் வேகமாக ஓடினேன்.. கூட்ட நெரிசலில் நவீனின் கையை விட்டுவிட்டேன்... அவனைத் தேடுவதெல்லாம் வாய்ப்பே இல்லை. பின்னால் இருந்து மிகையான அழுத்தத்தில் தள்ளுகிறார்கள். வேகமாக ஓடுவதைத் தவிர வேறு வழியும் இல்லை. இரண்டாவது கதவும் தாண்டியாயிற்று.. மூன்றாவது வாசலும். குகை போன்ற ஓடுபாதை சற்று வளைந்து வளைந்து சென்றுகொண்டிருக்கிறது. இப்போது என்னருகில் சீவிதா அரவிந்தன் ஓடிக்கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்த மீரா ஆரவிந்தன் "டீ இன்னும் வேகமாக ஓடு டீ" என்று சீவிதாவை அதட்டினாள். அவர்களைப் பார்த்து "இப்போது வந்துவிடுமா" எனக்கேட்டேன். "காமேசு அண்ணா, நாம் இன்னும் நீண்ட தொலைவு செல்லவேண்டும். உங்கள் பள்ளிக்கூடப் பாடத்தில் இதுபற்றி விரிவாகச் சொல்லிக்கொடுத்திருப்பார்களே. விருப்பத்தெரிவில் அதைப் படிக்காமல் விட்டுவிட்டீர்களா" எனப் பகடி செய்தாள் மீரா. "ஆனால் கவலைப்படாதீர்கள், அவள் அப்படித்தான். நீங்கள் வேகமாகத்தான் ஓடுகிறீர்கள் அண்ணா. உங்களுக்கு என் வாழ்த்துகள்" என்று ஊக்கமளித்தாள் சீவிதா . அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு இன்னும் வேகமாக ஓடத்தொடங்கினேன். பார்த்தவர்கள் எல்லாரும் மாறி மாறி ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் சொல்லிக்கொண்டே வேகமாக ஓடினோம். நான் வேகமாக ஓடியதால் பெருங்கூட்டத்தை லிட்டு சற்று தள்ளி வந்துவிட்டிருந்தேன்.. என் ஓட்டத் திறமையை நினைத்து பூரிப்படைந்து எனக்கே மார்தட்டிக்கொண்டேன்.
சிறிது நேரத்தில் திடீரென தொலைவில் ஒரு சலசலப்பை உணரமுடிந்தது. என்னவென்று தலையை உயர்த்தி எட்டிப் பார்த்தால் எங்கள் எல்லாரையும் விட மிக வேகமாக ஓடி முன்னேறிச் சென்ற தீபிகா அரவிந்தனும் பிரவீன் அரவிந்தனும் பூமா அரவிந்தனும் எதையோ உரக்கக் கூறிக்கொண்டே எதிர்திசையில் தலைதேறிக்க ஓடிவந்துகொண்டிருப்பது தெரிந்தது. இன்னும் என் தலையை எட்டிப் பார்த்தபோது அவர்கள் எங்களையும் பார்த்து திரும்பச்செல்லுமாறு சைகை காட்டியபடியே எங்களைநோக்கி ஓடிவந்துகொண்டிருந்தனர். இப்போது அவர்கள் கத்துவது கேட்டது "திருப்பிச் செல்லுங்கள்... திருப்பிச் செல்லுங்கள்... நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம்.. நம் அனைத்து ஆசைகளும் கனவுகளும் அழுக்கில் புதைக்கப்படப்போகிறது.." என அவர்கள் ஆற்றாமையிலும் சினத்திலும் கத்திக்கொண்டே வந்துகொண்டிருந்தனர். என் மரமண்டைக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குள் அங்கு வேகமாக ஓடிவந்த நம் அணித்தலைவர் இராகவன் "என்ன ஆச்சு, ஏன் எதிர்பக்கமா ஒடிவருகிறீர்கள்" என கேட்டதற்கு, பிரவீன் மூச்சிரைத்தவாறே "கடவுளே! அதை நான் எப்படிச் சொல்வேன்.." அதற்குள் பின்னால் வரும் பெருங்கூட்டம் எங்கள் எல்லாரையும் படு வேகமாக தள்ளத்தொடங்கியிருந்தார்கள். பிரவீன் கத்தினான்...
"அரவிந்தன் அவளோட பின்பக்கம் வழியாகச் செய்கிறாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆன்..."
கத்தியும் பயனில்லை.. எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்திருந்தது..
::இயல்பு நிலையில் காட்டல்
சிறிது நேரத்துக்குப் பிறகு "நளினி.."
"ம்..."
"நளினிச் செல்லம்..."
"ம்.. என்ன..?"
கிசுகிசுக் குரலில் "பிடித்திருந்ததா..."
"......."
"இல்லை.. முதன்முதலா இதனைச் செய்கிறோம்... அதுதான்....."
"....."
"உண்மையைச் சொல்லவேண்டும் என்றால்.. பிடிக்கவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்... சரி எனக்கு ஆய் முட்டுவது மாதிரி இருக்கு.. போயிட்டு வரேன்..."
"......."
கழிவறைக்கு உள்ளிருந்து "இனிமேல் இது வேண்டவே வேண்டாம் அரவிந்தன்..."
"....."
No comments:
Post a Comment