Tuesday, April 26, 2022

எடுகோள்

எடுகோள்

க்காலத்திலும், மாந்தர்கள் தங்கள் அறிவியல் வளத்தில் சிலபல எடுகோள்களை வைத்துக்கொண்டே அடுத்த நிலையை நோக்கிச் செல்வர்.  அவ்வாறான எடுகோள்களில் பல, ஞாலப்பருவத்திற்கேற்ப ஐயத்திற்கும் ஆய்விற்கும் உட்படுத்தப்பட்டு அவைகளை நிறுவவேண்டுமா தொடரவேண்டுமா களையவேண்டுமா என அறிஞர்களால் முடிவுசெய்யப்படும்.  இது தொடர் அறிவியல் தேடலின் நிலைப்பாடு.

னால், சில எடுகோள்களாக கருதப்பட்டவைகளோ, ஐயத்திற்கு உட்படுத்தப்படாது உறுதியாக இறுதியாக மாந்தர்களால் நம்பப்பட்டுவிடுகின்றன.  இவை உறைந்துபோய்  சமயங்களாகவும் கடவுள்களாகவும் பேதைமைகளாகவும் குருட்டு நம்பிக்கைகளாகவும் ஆகிவிடுகின்றன.  ஆக, ஒவ்வொரு நம்பிக்கை சார்ந்த படைப்புகளை கூர்ந்து கவனித்தோமென்றால் அதில் நன்னெறிகள் மற்றும் நம்பிக்கை சார்ந்த கூறுகள் போக, அறிவியல் சார்ந்த சிலபல எடுகோள்களும் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும்.  இது இயல்பான ஒன்றே.  இறைவனைப் பற்றியான படைப்புகளில், இறைவனின் படைப்புகளாக சமயங்களால் கருதப்படும், அக்காலத்தில் உண்மை என எடுத்துக்கொள்ளப்பட்ட அறிவியல் எடுகோள்களையும் குறிப்பிடுவது இயல்பே.  ஆனால் அவ்வகையான எடுகோள்களில் சில அதன்பின்னர் ஏற்பட்ட சில அறிவியல் முன்னேற்றத்தினால் காலாவதியாகிப்போயிருக்க வாய்ப்புண்டு.  மாந்தர்களிடையே புழங்கும் பல நம்பிக்கை சார்ந்த படைப்புகளிலுள்ள அறிவியல் எனக்கருதப்படும் எடுகோள்களில் பல காலாவதியாகிப்போய் சில நூற்றாண்டுகளே ஆகிவிட்டன.





















No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...