Tuesday, October 24, 2023

வாழ்க்கை

 வாழ்க்கை

அடிப்படையற்ற வாழ்க்கையடா - இதில்
அடிக்கடி கவலை ஏதுக்கடா..
அழுகையும் புலம்பலும் பொருளற்றது - உள
அமைதி மட்டுமே நிறைவுதரும்

இடரென்பது குறுவரலாறு - நுகர்
இனிமை நொடியில் மறைபாடு..
இம்மையின்பின் உனை நினைப்பது யார் - இந்த
இயற்கைக்கு நீ வெறும் இமைப் பொழுது..

உறக்கக் கனவுகள் கானல் நீர் - நம்
உய்யக் கனவொரு கோதிக்கும் நீர்...
உளமுறிவும் பெறும் இன்சுவையும் - அது
உருகிடும் நேரமே வாழ்கையடா...

எத்தனை நம்முள் எண்ணங்கள் - அதில்
ஏக்கமும் நோக்கமும் பெரும்பகுதி..
எமன் வரவை நீ நினையாதே - உயிர் 
எல்லையில்லை என முடித்துவிடு..

ஒரு ஞாலம் அதில் ஒரு யாக்கை - பின்
ஒற்றை உயிர் மறு உடல் பெறுமோ..
இன்னுலகோ இல்லை தீயுலகோ - இதை
ஒருவரு மறியார் மகிழ்விலிரு..

No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...