Friday, January 21, 2022

நாமாக பாடங்களைக் கற்றுக்கொள்வது எப்படி? (அகேபஒம)

அவிபஒம
(SQRRR)

௧ - அலசல்} ஒரு பாடத்திலுள்ள தலைப்புகள், துணைத் தலைப்புகள், படங்கள், பட்டியல்கள், சிறப்புக்குறிப்புகள், பகுதி-முடிவுரைகள் ஆகியவற்றை அலசி (Survey) தனியாக குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.  இதனைச் செய்ய மிகுந்த நேரம் தேவையில்லை. ஆனால் இது அந்த பாடத்தைப் பற்றியான ஒரு அடிப்படை உணர்வைக் கொடுத்துவிடும்..

௨ - வினவுதல்} நீங்கள் குறித்துவைத்துக்கொண்டுள்ள ஒவ்வொன்றைப்பற்றியும் குறைந்தது ஐந்து  வினாக்களை (Question) எழுதிவைத்துக்கொள்ளுங்கள்..

௩ - படித்தல்} இனி பாடத்தை படியுங்கள் (Study).  ஏற்கனவே நீங்கள் எழுப்பியிருக்கும் வினாக்களுக்கு பதில்களைத் தருகிறதா என தேடிக்கொண்டவாறே பாருங்கள். படித்து முடித்தபின் பாடத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரி வினாக்களுக்கும் நீங்கள் தற்போது படித்ததானது பதில்களைத் தந்திருக்கிறதா எனவும் பாருங்கள். இதில், பதில் கிட்டாத வினாக்களைக் குறித்துவைத்துக்கொண்டு அவற்றை பெற்றோர்களிடமோ ஆசிரியர்களிடமோ மற்ற கற்றறிந்தோர்களிடமோ கேட்டுத் தெளிவுபெறுங்கள்.

௪ - ஒப்பித்தல்} இக்கேள்விகளை எல்லாம், உங்கள் நலம்விரும்பிகளைக் கொண்டு, ஒவ்வொன்றாகக் கேட்கச்சொல்லி, அதற்கான பதில்களை உங்கள் நினைவுகளிலிருந்து  ஒப்பியுங்கள் (Recite).  

௫ - மறுசீராய்தல்} எல்லாம் முடிந்தபின் அப்பாடத்தை மீண்டும் ஒருமுறை வேகமாகப் படித்து, பாடத்தில் உள்ளவற்றுக்கும் தற்போது உங்கள் நினைவாற்றலில் உள்ளவற்றுக்கும் வேறுபாடுகள் ஏதேனும் இருக்கிறதா என மறுசீராய்வு (Review/Revision) செய்துகொள்ளுங்கள்.. இதனை ஓரிரு திங்கள்களுக்கு ஒருமுறையும் செய்திடுங்கள்..

No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...