பல மொழிப் பாடல்களையும் சுவைத்து மகிழும் நான், இன்னும் தெலுங்குத் திரைப்படப் பாடல்களை அவ்வளவாகக் கேட்டதில்லை. அண்மையில் இயூட்டியூபில் துழாவிக்கொண்டிருந்தபோது எனக்குப் பரிந்துரைக்கப்பட்ட பாடல் "மனசா துள்ளி படகே". தனக்கு பிடித்திருக்கும் ஆணைவிட, தான் எல்லா வகையிலும் குறைந்தவள் என எண்ணிச் களித்துக்கொள்ளும் ஒரு பேதைப் பெண், ஆற்றாமையில் பாடுவதாக அமைக்கப்பட்டு, "சிறீவாரிக்கி பிரேமாலேகா" என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல்.
ஓரிரு முறை இப்பாடலை கேட்டபின், இது எனது உளங்கவர்ந்த பாடல்களில் ஒன்றாகிவிட்டது. பசுபலேதி இரமேசு எனும் இசையமைப்பாளரின் மிக அருமையாக மெட்டமைத்திருக்கிறார். நான்கூட முதலில் இது நம் இளையராசாவோ என நினைக்குமளவுக்கு தரமான இசை. சானகியின் குரலும் பூர்ணிமாவின் நடிப்பும் பாடலுக்கு உரஞ்சேர்கின்றன.
கவிஞர் வெட்டூரி சுந்தரராமமூராத்தியின் வரிகளானவை, அப்பெண்ணின் ஏக்கத்தை கச்சிதமாகப் படம்பிடித்துக்காட்டுகிறது. பாடலின் உணர்வையும் பொருளையும் சந்தத்தையும் சிதைக்காது, இந்த வரிகளை எனக்கு இருக்கும் அடிப்படை மொழியறிவினால், தமிழாக்கம் செய்துள்ளேன். குற்றங்கள் இருப்பின் பொறுத்தருளவும்.
உளமே! துள்ளிடாதே. மிகையாய் அவா கொளாதே. அவனுக்கு உன்பால் விருப்பமோ இலையோ? அந்த நல்லவேளை வருமோ வராதோ? பொறுமை கொள்ளேன் உளமே! இன்றே லிழிவே!.
உளமே! துள்ளிடாதே. மிகையாய் அவா கொளாதே.
அவனுன்னை மிகவாக விரும்பிட,
அழகேது முன்னிடம் உளதோ?
அவனுந்தன் நிலை எண்ணி மலைத்திட,
செல்வமேனும் செழிப்பாய் உளதோ?
படிப்பு பதவி எதுண்டோ உனக்கு?
பகட்டோ வடிவோ எதுமிலை உனக்கு.
உனதெல்லைமீ றாதே உளமே.
உளமே! துள்ளிடாதே. மிகையாய் அவா கொளாதே. அவனுக்கு உன்பால் விருப்பமோ இலையோ? அந்த நல்லவேளை வருமோ வராதோ? பொறுமை கொள்ளேன் உளமே! இன்றே லிழிவே!.
என்நெஞ்சே! காதலை பெற்றிட,
என்னென்ன நோன்புகள் நோற்றாய்?
கடவுள்கள் காதலர்கருளிடும்,
அரிதான பேறெதும் பெற்றாய்!?
உள்ளமே நீகேள், அவன்மிக்க எழிலன்,
அவனே உனக்கு இணையாவா னென்ற,
கனா வேண்டாமே பேதை உளமே!
உளமே! துள்ளிடாதே. மிகையாய் அவா கொளாதே. அவனுக்கு உன்பால் விருப்பமோ இலையோ? அந்த நல்லவேளை வருமோ வராதோ? பொறுமை கொள்ளேன் உளமே! இன்றே லிழிவே!.