Saturday, October 7, 2023

நிம்பூ!!

 நிம்பூ!!

இடம்: நாகர்கோவில்
ஆண்டு: 2023

"நிம்பூ.. நிம்பூ..." இந்த ஓசை தான் என்னை எழுப்பியது.  'எவன்டா அது காலங்காத்தால தலமாட்ல வந்து கத்துறது..' என்று அரைத் தூக்கத்தில் சலித்துக்கொண்டே தலையணை அருகே  தலைகுப்புறக் கிடந்த திறன்பேசியை உரசி உயிர்ப்பித்தபோது காலை 10:26 என்று கொட்டை எழுத்தில் காண்பித்தது.  

நேற்றிரவு விழித்திருந்து செய்த பணி மற்றும் இன்னும் மிச்சமிருக்கும் சிலபல அலுவலகக் கடமைகள் சட்டென நினைவுக்கு வர முக்கால் விழிப்பில் இருந்த என்னிடம், 'எழுந்தே ஆகவேண்டும்' என வலப்புற மூளை சொல்லிக்கொண்டிருக்கும்போதே 'வாட்சாப்' என கட்டைவிரலுக்கு கட்டளையிட்டது இடப்பக்க மூளை.  

ஞெலுவர் மற்றும் கேளிர் குழுக்களிலிருந்த "காலை வணக்கம்" பகிர்வுகளை மேல்புறமாக  உருட்டிக்கொண்டிருக்கும்போது, மீண்டும் "நிம்பூ.. நிம்பூ... ஏக் கிலோ பச்சாசு உரூபையா" என்ற அந்த உரத்த குரல் கேட்டது.  திடுக்கிட்டுக் குழம்பிய நான் போர்வைகளை உதறி எழுந்து  வாசற்கதவை திறக்கும்போதே, அதே குரல் "எலுமிச்சம்பழம்.. எலுமிச்சம்பழம்.. கிலோ அம்பது உரூவா" எனக் கத்தியது!! வெளியில் வந்தால், நம் ஊர்க்கார சாயலில் இருந்த ஒருவர் எம்80 ஈருருளியில் எலுமிச்சம்பழம் விற்றுக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்.  நடுமுடுக்கு, தாண்டிச்சேன்ற அவர் மீண்டும் "நிம்பூ.. நிம்பூ..." என உரக்கக் கூவிச்சென்றார்...


No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...